முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 178 பின்னணியில் இருக்கும் பெண் சாமியார்!

இலங்கையின் பாரிய நெருக்கடிக்கு பின்னணியில் இருக்கும் பெண் சாமியார்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியின் பின்னணியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) மூட நம்பிக்கையே காரணமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேவேளை, நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி கோட்டாபய அனுராதபுரத்தில் ஞானக்காவின் உதவியை நாடியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள பொருளாதார நிபுணர்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் மூத்த அரசியல்வாதிகளின் உதவியைப் பெறுவதற்குப் பதிலாக, ஜனாதிபதி கோட்டாபய ஞானக்காவின் உதவியை பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (28-03-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதைய நெருக்கடிக்கு ஞானக்காவே பொறுப்பு கூற வேண்டும் என அவர் கூறியுள்ளார். நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முன்கூட்டியே தீர்வுகளை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு (2022) மார்ச் மாதம் எதிர்கொள்ளப்போகும் பாரதூரமான நிலைமையை கடந்த செப்டெம்பர் மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை முன்கூட்டியே பெற்று நெருக்கடியை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடி குறித்தும், இதன் மூலம் மக்கள் நெருக்கடிக்குள்ளாகுவதனை தடுப்பது தொடர்பிலும் ஐ.தே.க தலைவர் கூறியதை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாந்திரீக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண் சாமியாரான ஞானக்காவின் தீவிர பக்தனாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உள்ளார். அவர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மந்திரவாதி பெண்ணின் ஆலோசனைப்படி நடைபெறுவதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?