முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 106 தமிழர்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்

பிரித்தானிய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு! தமிழர்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்
பிரித்தானியாவின் P அன்ட் O பெர்ரிஸ் கப்பல் நிறுவனம் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. அவர்களுக்குப் பதிலாக குறைந்த சம்பளம் வழங்க கூடிய தொழிலாளர்களை நியமிக்கவுள்ளது. இதனால் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் உட்பட பலருக்கு சிறந்த சம்பளத்துடனான தொழிலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களிலேயே 100 மில்லியன் பவுண்டுகள், நஷ்டமடைந்த P அன்ட் O கப்பல் சேவை, பிரித்தானியாவில் உள்ள தனது அனைத்து கப்பல் தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது. ஊழியர்களுக்கு வீடியோ அழைப்பில் நேற்று வேலையின் இறுதி நாள் என கப்பல் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் கப்பல்களை விட்டு வெளியேற மறுத்த நிலையில், பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஊழியர்கள் அகற்றப்பட்ட நிலையில் கப்பல் நிறுவனம் 10 நாட்கள் தமது சேவையை நிறுத்தியுள்ளதாக அதன் நிறைவேற்று அதிகாரி அறிவித்துள்ளார். அத்தோடு ஆயிரக்கணக்கான புது தொழிலாளர்களை அது வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ள நிலையில். எவரும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் கென்ட் நகரில் இருந்து, பிரான்ஸ் செல்லும் இந்த கப்பல் சேவையில், பணி செய்ய விரும்பும் மக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை செய்யும் பல ஊழியர்களுக்கு மணித்தியாலத்திற்கு 16 பவுண்டுகளுக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. மேலும் போனஸ் மற்றும் ஏனைய கொடுப்பனவுடன் பாரிய சம்பளத்தை பெற்ற ஊழியர்கள், தொழிற்சங்கங்களின் விருப்பத்திற்கமைய செயற்பட்டுள்ளனர். எனினும் தொழிற்சங்கங்களை கலைக்க முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் அனைத்து ஊழியர்களையும் நீக்கியுள்ளது. தற்போது அவர்கள் இணையத் தளம் ஊடாக வேலை வாய்ப்புக்கு, புதிய ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?