முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 143 வடகொரியா தடை செய்யப்பட்டஆயுதங்களை சோதனை செய்ததா?

வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை, 2017ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சோதனை செய்ததாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
இன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வரும் நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டில் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி காணொளி காட்சி வாயிலாக பேசினார். இந்த மாநாட்டில், “எங்கள் வானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என மீண்டும் ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார். யுக்ரேன் வான் தளத்தை 'நோ ஃப்ளை சோன்'ஆக (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிக்க வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், பெரும் அழிவுகளையும், விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தி வருவதை கண்கூடாக பார்த்துவருவதாக அவர் தெரிவித்தார். ரஷ்யா தங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் வரையறையின்றி பயன்படுத்திவருவதாகவும், குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் பாலங்களை ரஷ்யப்படைகள் இலக்கு வைப்பதாகவும் ஸெலென்ஸ்கி கூறினார். இதுவரை யுக்ரேன் எந்தவொரு போர் விமானத்தையும் மற்ற நாடுகளிடமிருந்து பெறவில்லை என அவர் தெரிவித்தார். மேலும், தங்களுக்கு ராணுவ டாங்கிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். “எங்களுக்கு டாங்கிகளை வழங்குங்கள், எங்களுக்கு அதனை விற்பனை செய்யுங்கள்” என அவர் கூறினார். ஆனால், இதற்கு நேட்டோ நாடுகளிடமிருந்து தெளிவான பதில் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. “யுக்ரேன் பல ஆண்டுகளாக போரை நடத்த விரும்பவில்லை” என அவர் தெரிவித்தார். “நாங்கள் வாழ விரும்புகிறோம், எங்கள் மக்களை காப்பாற்ற விரும்புகிறோம்,” என அவர் கூறினார். ஆனால்,தான் நேட்டோவை குற்றம்சாட்டவில்லை என அவர் கூறினார். “எங்களின் நகரங்களை அழிப்பது அவர்களின் (நேட்டோ) ஏவுகணைகள் அல்ல. எங்களுக்கு வெடிமருந்துகளை அதிகம் வழங்குவதன் மூலம், இனி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நேட்டோ நாடுகள் எங்களுக்கு உதவ வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?