முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 105 அதிர்ச்சியில் 100 குடும்பங்கள்

செங்கல்பட்டில் வீடுகளை காலி செய்ய திடீர் நோட்டீஸ்; அதிர்ச்சியில் 100 குடும்பங்கள் -
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் செங்கல்பட்டு வீடுகள் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள திரு.வி.க.நகர், அருணாகுளம் பகுதிகளில் ஏரியை ஒட்டி அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற வருவாய்த் துறையும் பொதுப் பணித் துறையும் முடிவு செய்துள்ளன. பல ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்கள், எங்கு செல்வதென கேள்வி எழுப்புகிறார்கள். கட்டடப் பணிகளில் சித்தாளாக வேலை பார்த்து வரும் சுலோச்சனா, தனது வீட்டை இடிக்கப்போவதாக நோட்டீஸ் வந்ததைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். இவரது கணவர் ஒரு மாற்றுத் திறனாளி. மகனும் கண் பார்வை தெரியாத மாற்றுத் திறனாளி. விரிந்து பரந்து கிடக்கும் மதுராந்தகம் ஏரியின் தென் பகுதியில் கரையின் ஓரமாக உள்ள திரு.வி.க. நகரில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார். "இப்போது திடீரென வந்து காலிசெய்யச் சொன்னால், மாற்றுத் திறனாளிகளான மகனையும் கணவரையும் வைத்துக்கொண்டு எங்கே போவது? நான் இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன். இங்கிருந்த பெரும்பாலானவர்கள் 30 -40 வருடங்களுக்கு முன்பாக இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கியவர்கள்தான். இப்போது திடீரென இப்படிச் சொல்வது தலையில் இடி விழுந்ததைப் போலிருக்கிறது. எங்களுக்கு வேறு இடத்தில் வீடு கொடுத்து, எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தால்தவிர, இந்த இடத்தைவிட்டு வெளியேற மாட்டோம்" என்கிறார் சுலோச்சனா. மதுராந்தகம் ஏரியின் கரையில் அமைந்திருக்கும் திரு.வி.க. நகர், அருணா குளம் பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்படி அதிர்ந்துபோன நிலையில்தான் இருக்கிறார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?