முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 104 உதைபந்தாட்டப் போட்டி 2022.

சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி 2022.
சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022! 16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவினை முன்னிட்டு 25வது தடவையாக நடைபெற்ற வளர்ந்தோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 13.03.2022 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள Wankdorf உள்ளரங்க மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இச் சுற்றுப்போட்டியானது பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது. தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றுப் பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற இச் சுற்றுப்போட்டியில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு தமிழின உணர்வாளர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் பங்குபற்றியிருந்தமையோடு, சுற்றுப்போட்டியினை சிறப்பாக நடாத்த தங்களாலான உதவிகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். எமது உத்தியோகபூர்வமான இணையத்தளம் ஊடாக போட்டிமுடிவுகளை உடனுக்குடன் நேரஞ்சல் செய்யப்பட்டதுடன், பெண்கள் மற்றும் வளர்ந்தோர் போன்ற பிரிவுகளில் போட்டிகளும் நடைபெற்றன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதியாட்டத்தில் பேர்ண் றோயல் விளையாட்டுக்கழகம் பத்தாவது தடவையாக வெற்றிபெற்று சாதனை படைத்தனர். மேலும் வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளுக்கான பதக்கங்களும், கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து போட்டிகள் சிறப்பாக நிறைவடைந்தன. இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வளர்ந்தோர் உதைபந்தாட்டம்: 1ம் இடம் பேர்ண் றோயல் விளையாட்டுக் கழகம் 2ம் இடம் சூரிச் சிற்றிபோய்ஸ் விளையாட்டுக் கழகம் 3ம் இடம் லிம்மற்றால் பாடன் விளையாட்டுக் கழகம். சிறந்த விளையாட்டு வீரர் தங்கராசா ஆகாஷ சூரிச் சிற்றிபோய்ஸ் விளையாட்டுக் கழகம் சிறந்த பந்துகாப்பாளர் வசந்தன் தனுசன், பேர்ண் றோயல் விளையாட்டுக் கழகம் அதிக இலக்குகளை அடித்த வீரர் தங்கராசா ஆகாஷ சூரிச் சிற்றிபோய்ஸ் விளையாட்டுக் கழகம் சிறந்த பயிற்சியாளர் சிறீகாந்தன், சூரிச் சிற்றிபோய்ஸ் விளையாட்டுக் கழகம் இறுதியாட்ட நாயகன் விஸ்வநாதன் நெலுக்ஸன், பேர்ண் றோயல் விளையாட்டுக் கழகம் பெண்கள் உதைபந்தாட்டம்:
1ம் இடம் லீஸ் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம் 2ம் இடம் தாய்மண் விளையாட்டுக் கழகம் 3ம் இடம் இளம்சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம். சிறந்த விளையாட்டு வீராங்கனை Esin Bardakci, தாய்மண் விளையாட்டுக் கழகம் சிறந்த பந்துகாப்பாளர் Yeal Steiner, லீஸ் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம் இறுதியாட்ட நாயகி சர்மிளா செல்வரட்ணம், லீஸ் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம்
விளையாட்டுத்துறை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?