முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 103 ஏவிக் கொன்ற மகன்!!

இது தான் இலங்கை : போதைக்கு தடையாக இருந்த அப்பாவை கூலிப்படை ஏவிக் கொன்ற மகன்!!
மட்டக்களப்பு கரடியனாற்று பிரதேசத்தில் 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து கூலிக்கு ஆள் வைத்து, தனது தந்தையை கொலை செய்த 22 வயதுடைய மகன் உட்பட இருவரை நேற்று (17) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வயல் பகுதியில் வயல் காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றில் இருந்து வெட்டுகாயங்களுடன் 4 பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் பரசுராமன் (54) என்பவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 3 பெண் பிள்ளைகள், 22 வயதுடைய ஒரு ஆண் பிள்ளையுமாக 4 பிள்ளைகளின் தந்தையான இவர் விவசாயம் மேற்கொண்டு வருகின்றார்.இந்த நிலையில் 22 வயதுடைய மகன் சிந்துஜன் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளார். மதுபானம் வாங்க தந்தையிடம் பணம் கேட்பது மற்றும் மாட்டுப்பட்டியிலுள்ள மாடுகளை திருடி விற்பது போன்ற நடவடிக்கையால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனையடுத்து சிந்துஜன் தனது தந்தையை கொலை செய்ய திட்டமிட்டு கிரான் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான இட்ணராஜா நிரோசன் என்பனை கடந்த முதலாம் திகதி (1) சந்தித்து தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாக பேரம் பேசியுள்ளான். இதனைத் தொடர்ந்து அவனிடம் தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டு தந்தையை கொலை செய்வது தொடர்பில் பேசி வந்துள்ளான்.இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி பரசுராமன் வழமைபோன்று வயலில் உள்ள கொட்டகைக்கு தனிமையில் சென்று காவலில் ஈடுபட்டுள்ளார்.பரசுராமன் தனிமையில் சென்றிருப்பதை அறிந்த கூலிக்கு கொலை செய்ய அமர்த்தப்பட்ட இட்ணராஜா நிரோசன், அந்த கொட்டகைக்கு சென்றுள்ளான். மகனின் நண்பனான நிரோசனை கண்ட பரசுராமன் அவனுடன் பேசிக் கொண்டு அவனுக்கும் இரவு உணவை கொடுத்து இருவரும் சேர்ந்து உணவு உண்டுள்ளனர். இருவரும் உறங்கியுள்ள நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் நிரோசன் கண்விழித்து பார்த்த போது பரசுராமன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவரின் தலையில் போட்ட்டான். எனினும், அவர் உயிரிழக்காததையடுத்து அவன் கொண்டு சென்ற கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளான். அப்போதும் அவருக்கு உயிர் போகவில்லை.அதனைத் தொடர்ந்து தனது இடுப்பிலுள்ள நாடா ஒன்றை எடுத்து அவரின் கழுத்தை சுற்றி இழுத்து நெரித்து அவரை கொலை செய்துள்ளான்.பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று அதிகாலை 4 மணியவில் தனது நண்பனுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி ‘நீ சொன்ன மாதிரி உனது அப்பாவை கொலை செய்துவிட்டேன்’ என தெரிவித்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளான். எனவே பேரம் பேசியவாறு பணத்தை கொடுப்பதற்காக தனது நண்பனை தேடி கடந்த 14ம் திகதி கிரான் பகுதிக்கு சென்று நகை ஒன்றை ஈடு வைத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை நண்பனிடம் வழங்கியுள்ளான்.பேரம் பேசிய பணத்தை பெற்ற நிரோசன் அங்கு ஏற்கனவே நகைக்கடை ஒன்றில் 23 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்த நகையை ஈட்டில் இருந்து மீட்டுக் கொண்டு அங்கிருந்து இருவரும் பிரிந்து சென்றுள்ளதாக கைது செய்யப்பட்ட இருவரிடம் பொலிசார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் நாடா, கல் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் இந்த கொலை தொடர்பாக முதலில் கொலை செய்யப்பட்டவரின் மகஇனை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் கொலையாளியை கைது செய்துள்ளதாகவும் இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?