முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 139 மணப்பெண்களின் முகம் பளபளவென இருக்கவேண்டுமா?

மணப்பெண்களின் முகம் பளபளவென இருக்கவேண்டுமா? இந்த 3 சூப்பர் ஃபேஸ் பேக்குகள் போதும்!
திருமணத்துக்காக நகை, பட்டுப்புடவைகள் வாங்குவதை விட மணப்பெண்களுக்கு முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்வது தான் முக்கியம் என நினைப்பார்கள். இப்போதெல்லாம் திருமணப் பேச்சு தொடங்கியதும், பேஷியல் பேக்கேஜ் எடுத்துக்கொள்கிறார்கள். இதன்படி தொடர்ந்து 3 முதல் 6 மாதங்கள் ஆயிரக்கணக்கில் அழகு நிலையங்களுக்கு செலவு செய்கிறார். அழகு நிலையங்களுக்கு சென்று ஃபேசியல் செய்வதை விட வீட்டிலிருந்தபடியே சருமத்தைப் பாதுகாக்கலாம். தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பின்னர் குளிர்ந்த நீரால் சுத்தம் செய்து விட்டு உறங்கச் செல்லலாம். இது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி பொலிவைக் கொடுக்கும். அதேபோல் காலையில் குளிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் தேய்த்துவிட்டு குளிக்கச் செல்லலாம். இதனால் வறண்ட சருமம் மிருதுவாகும். காலை குளித்ததும் முகத்தில் மாய்ஸ்சரைசர் அல்லது கிரீம்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு கிரீன் டீயை காட்டன் கொண்டு முகத்தில் தடவுங்கள். இதனை தினமும் செய்வது மூலம் முகத்தில் உள்ள கருமை நீங்கும். இதெல்லாம் இருக்க திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் வீட்டிலேயே சுலபமாக செய்து கொள்ளக்கூடிய 3 ஃபேஸ் பேக்குகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் கருமைகளை நீக்க தக்காளியை அரைத்து அதனுடன் மஞ்சள் மற்றும் சந்தனம் சேர்த்து முகத்தில் தடவலாம். சந்தனம் தான் சருமத்திற்கு மிகச் சிறந்தது. ஆனால் தூய்மையான சந்தனத்தை தேடிப்பிடித்து வாங்க வேண்டும். போலியான சந்தனம் சருமத்தை பாதிக்கும். இந்த கலவையை வாரம் 2 முறை அப்ளை செய்து வர வேண்டும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் 3 முறை வரை செய்யலாம். சுமார் 20 நிமிடங்கள் இந்த கலவையை தடவி விட்டு பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிவிடுங்கள். முகத்தில் உதட்டிற்கு மேல் முடிகள் இருக்கும். இவற்றை நீக்க பச்சைப் பயிறை 2 மணி நேரம் ஊறவைத்து பின்னர் அரைத்துக் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சந்தனப் பொடி, உலர்த்திய ஆரஞ்சுத் தோலினை பொடியாக்கி அதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் எலுமிச்சை, ரோஸ் வாட்டர், கருவேப்பிலைப் பொடியையும் சேருங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் அதுவாகவே நீங்கிவிடும். இந்த ஃபேஸ் பேக்கை அதிகபட்சமாக 20 நிமிடங்கள் வரை முகத்தில் ஊற வைக்கலாம். பின்னர் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். சருமம் பொலிவு பெற கடலை மாவு, எழுமிச்சை, சந்தனம் சேர்த்து முகத்தில் தடவவும். இதனை வாரம் 2 முறைச் செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்குகளை இரவில் செய்வது நல்லது. ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்திய பின்பு குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை முகத்தில் சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இதில் எலுமிச்சை சேர்ப்பது மூலம் அலர்ஜி அல்லது முகவறட்சி ஏற்படுவதாக உணர்பவர்கள் எலுமிச்சைக்குப் பதிலாக தயிர் சேர்த்துக் கொள்ளலாம். ஃபேஸ் பேக்குகளை கழுவிய பின்பு சீரம் அல்லது முகக் கிரீம்களை தடவி விட்டு உறங்கச் செல்லுங்கள். தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?