வெளிநாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்! - மேல்முறையீடு தள்ளுபடி
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபரின் மேல்முறையீட்டை சிங்கப்பூர் அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது.
நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞரே இவ்வாறு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவரின் மேல்முறையீட்டை சிங்கப்பூர் அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் கடந்த 2009ம் ஆண்டு சிங்கபூருக்கு 42.72 கிராம் போதைப்பொருளை கடத்தியபோது கைது செய்யப்பட்டார். இது குறித்த விசாரணையின் போது போதைப்பொருள் கடத்தியது உறுதி செய்யப்பட்டதால் 2010ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை எதித்தது 2011ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும், உயர்நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்சநீதி மன்றிலும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதபின் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். ஜனாதிபதி கருணை மனுவை திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலையில், மரண தண்டனைக்கு எதிராக சிங்கப்பூர் அரசிடம் முறையீடு செய்தார்.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தர்மலிங்கத்தின் மனுவை விசாரித்தது. அப்போது, தர்மலிங்கத்தின் முறையீடு எங்கள் அரசியலமைப்புக்கு எதிராக அப்பட்டமானது மற்றும் நீதிமன்ற துஷ்பிரயோகம்’’ எனத் தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தர்மலிங்கம் சார்பில் மரண தண்டனையை நிறுத்தி வைத்து மனநல குழுவை கொண்டு மதிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனு உண்மை மற்றும் சட்ட அடிப்படையில் இது தகுதியற்றது, அடிப்படையற்றது என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்