முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 90 புதுப்பொலிவு பெறும் மெல்பன் தமிழர்களின் 'தலைநகரம்

புதுப்பொலிவு பெறும் மெல்பன் தமிழர்களின் 'தலைநகரம்', கோடிகளில் தயாராகும் அடுக்குமாடிகள்!
மெல்பன் தமிழர்களின் 'தலைநகராகவும்' பல்லின மக்கள் செறிவாக வாழும் பிரதேசமாகவும் பன்னெடுங்காலமாகத் திகழும் Dandenong மாநகர் அடுத்த வருடம் முதல் பல லட்சக்கணக்கான டொலர்கள் செலவில் புதுப்பொலிவு பெறவுள்ளது. அடுக்கு மாடி வீடுகள், வானுயர்ந்த கோபுரங்கள், புதிய வீதிகள் என்று முற்றிலுமாக உருமாறப்போகும் Dandenong பிரதேசத்தின் ஊடாக, நாட்டின் பொருளாதாரத்திற்கு வருடமொன்றுக்கு 150 கோடி டொலர் வருமானம் கிடைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஆரம்பமாகவுள்ள அபிவிருத்திப் பணிகளில் Foster Street, Cheltenham Road, Thomas Street, Halpin Way மற்றும் Mason Street ஆகியவற்றில் அமைந்துள்ள கடைகள் மற்றும் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, சுமார் 450 வீடுகளுடன்கூடிய அடுக்குமாடிகளும் 29 மாடிகள் கொண்ட இரண்டு குடிமனைக்கோபுரங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளன. Dandenong ரயில் நிலையத்துடன் அண்டிய பிரதேசம் முற்றிலுமாக புதிய பிரதேசமாக உருமாறப்போகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு பெரிய அங்காடிகளும் இங்கு புதிதாக அமையவுள்ளன.
2023 ஆம் ஆண்டு முதல் சுமார் 18 வருடங்களுக்கு இந்த அபிவிருத்திப் பணிகள் இடம்பெறும் என்றும், முதல் கட்டப் பணிகளின்போது சுமார் 3890 பேருக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும், மேற்கொண்டு நடைபெறப்போகும் பணிகளில் மேலதிகமாக 12 ஆயிரத்து 490 பேருக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம், Dandenong பிரதேசத்தில் வசிப்பவர்களில் 26 வீதமானவர்கள் மாத்திரமே ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். மிகுதி மக்கள் அனைவரும் பல நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்தவர்கள். முக்கியமாக, அல்பேனியா, ஆப்கான் மற்றும் தெற்காசிய நாட்டவர்கள் இங்கு செறிவாக வாழ்கிறார்கள். தமிழ் மக்களில் பெருந்தொகையானவர்கள் இப்பகுதியில் வசிப்பதும், பல தமிழ் வர்த்தகர்களுக்கு Dandenong இன்றைக்கும் பிரதான வருமான வளம் மிக்க மையமாகத் திகழ்வதும் குறிப்பிடத்தக்கது. அறிவிக்கப்பட்டுள்ள, Dandenong அபிவிருத்தி தொடர்பில் ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள 'லிட்டில் இந்தியா' வர்த்தகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளினால் தொடர்ச்சியாக இடம் மாறுவதற்குத் தள்ளப்பட்டுள்ள தங்களது கடைகள் வருமான ரீதியாகப் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும், அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த பிறகு, தங்களுக்கு ஏற்ற கடைகள் உரிய வாடகையோடு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் மிக மிக அரிது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?