முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 136 பிரபல கனேடிய ஸ்னைப்பர் கொல்லப்பட்டாரா?

ரஷ்ய துருப்புகளால் குறிவைக்கப்பட்ட பிரபல கனேடிய ஸ்னைப்பர் கொல்லப்பட்டாரா? வெளியாகியுள்ள
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது. இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்ட பிரபல கனேடிய ஸ்னைப்பர் உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானதாக கூறப்பட்ட தகவலின் உண்மை பின்னணி வெளியாகியுள்ளது. ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டவர் வாலி என்ற புனைப்பெயரில் அறியப்படும் பிரபல கனேடிய ஸ்னைப்பர். கனடா இராணுவத்தின் சார்பில் இவர் ஈராக்கில் பணியாற்றியதுடன், பின்னர் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதுடன், கடந்த வாரம் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும், ஸ்னைப்பர் வாலி கொல்லப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்நிலையில்,ரஷ்ய துருப்புகளால் குறிவைக்கப்பட்டது உண்மை எனவும், தான் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் அனைத்தும் கட்டுக்கதை எனவும், தாம் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலுக்கு இலக்கானது உண்மை எனவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும், சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் போரில் களமிறங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?