முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 190 இலங்கைத் தமிழர்களுக்கு உணவளிக்க தயார்

இலங்கைத் தமிழர்களுக்கு உணவளிக்க தயார் - மோடியின் அனுமதி கோரும் மு.க ஸ்டாலின்
!(Photos) கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் பிரதமரிடம்; வழங்கினார். அதில், இலங்கை தமிழர்கள் தொடர்பான கோரிக்கையும் அடங்கியிருந்தது. இலங்கையில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளன. 1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை காரணமாக தமிழகத்திற்கு வரும் ஈழத் தமிழர்களின் வருகை அதிகமாகியது. அந்த வகையில் 1983-2012-ம் ஆண்டு வரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர். எனவே சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளை தமிழர்களுக்கு உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் அறிவுறுத்த வேண்டும். இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. எனவே இலங்கையில் உள்ள தமிழர்கள் பலர் தமிழகத்திற்கு கடல் மார்க்கமாக வந்து கொண்டிருக்கின்றனர். அண்மையில் 3 ஆண்கள், 5 பெண்கள், 7 குழந்தைகள், 4 மாத கைக்குழந்தை என 16 பேர் தமிழக கடலோரத்தை வந்தடைந்தனர். அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத சூழ்நிலையில் மிக ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு அவர்கள் வந்தனர். தற்போது அவர்கள் ராமநாதபுரம் மண்டபத்தில் உள்ள நிரந்தர முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மிக மோசமான பொருளாதார சூழ்நிலை காரணமாக மேலும் பலர் தமிழகத்திற்கு வரக்கூடும் என்ற தகவல்கள் வந்துள்ளன. இந்த சூழ்நிலை கருதி, இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மற்றும் கொழும்பில் வசிக்கும் தமிழர்களுக்கும், தோட்டத் தொழிலாளர்களுக்கும், குறிப்பாக தமிழ் பெண்கள், குழந்தைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள் மற்றும் உயிர்காக்கும் மருந்து ஆகியவற்றை வழங்க தமிழக அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளது. எனவே இந்த கருணை அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசாங்கத்துக்கு தேவையான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தமது மனுவில் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?