முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 55 வெலி ஓயாவாக மாற்றப்பட்ட ஈழத்தின் இதய பூமி முல்லைதீவில் 67ற்கு மேற்பட்ட வ...

முல்லைத்தீவில் 67இற்கு மேற்பட்ட விகாரைகள் - ஈழத்தமிழ் மக்களால் இனி என்ன செய்ய முடியும்...

 By Vanan 14 மணி நேரம் முன்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளால் மலிந்துபோன ஒரு தேசமாக தமிழர் தாயகப்பகுதி மாறிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தமிழர்களின் இருப்பு என்பது அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 

கடந்த காலங்களில் கிழக்கில் அம்பாறையில் இடம்பெற்ற ஆக்கிரமிப்புகள் அங்கு தமிழர்களின் இருப்பினை விழுங்கி ஏப்பம்விட்ட நிலையில், இன்று ஒரு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கூட பெற முடியாத அளவிற்கு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதுபோல, ஈழத்தமிழர்களால் தமிழர் தேசத்தின் தலைநகரம் என்று விழிக்கப்படும் திருகோணமலை மிகப்பாரதூரமான ஆக்கிரமிப்புகளால் ஒட்டுமொத்த தமிழினத்தின் உரிமைகோரல்களும் தகர்க்கப்பட்டு முழுமையான சிங்கள முஸ்லிம் ஆக்கிரமிப்புகளால் நிறைந்துபோயிருக்கின்றது.

இரண்டாம் தர பிரஜைகளாக தமிழ் மக்கள் தங்களது இருப்பையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்க, அங்கிருக்கும் ஏனைய இனங்களைச் சார்ந்த இரட்டை இலக்க நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டு தமிழர்களின் வரலாற்று தலைநகரில் தமிழர்களின் தொன்மையின் அடையாளங்கள் அபகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.

இவ்வாறான நிலையில் இப்போது தமிழீழத்தின் இதயபூமி என்று விழிக்கப்படுகின்ற மணலாறு பிரதேசம் கூட, முற்றுமுழுதாக வெலிஓயாவாக மாற்றப்பட்டதும் அங்கிருக்கிருக்கூடிய தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும் அபகரிப்பட்ட அபாயகரமான சூழல் இப்போது முழுமையாக முல்லைத்தீவு மாவட்டம் முழுவதுமாக வியாபித்திருக்கின்றது.

இவை நீராவியடி, குருந்தூர் மலை, அண்மையில் கொக்குத்தொடுவாயில் அகழப்பட்ட மனிதப்புதைகுழிகள் என நீண்டுகொண்டிருக்கும் நிலையில் ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தற்போதைய சூழலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 67 விகாரைகள் பதிவுசெய்யப்பட்டுருப்பதாக கூறினார்.

அப்பிரதேசங்களில் தமிழர்களின் நிலம் மட்டுமல்லாது கடலும் மலையும் கூட அபகரிப்படுகின்ற நிலையில் ஈழத்தமிழ் மக்களால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.   

அதுமட்டுமல்லாது அங்கு இடம்பெறும் இன்னும் பாரதூரமான நடவடிக்கைகள் தொடர்பாக  பல திடுக்கிடும் தகவல்களையும் அவர் இதன்போது கூறினார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?