இந்தியாவை சிக்க வைக்க வெற்றிகரமான நகர்வு - மோடிக்கு அவசர கடிதம்
தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினையை இந்தியா தலைமை ஏற்று தீர்த்து வைக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயமாகவுள்ள பின்னணியில் இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களிடையே சர்வதேச ஆதரவுடன் இந்தியா வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம், இலங்கையிலுள்ள தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு கடிதம் மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மோசமான இராஜதந்திரம்
இராணுவ பலம் மற்றும் பொருளாதார பலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சமச்சீரற்ற உறவை கருத்தில் கொண்டு, விளையாட்டுக் களத்தை சமன் செய்ய இலங்கை மோசமான இராஜதந்திரத்தையும், போலித்தனத்தையும் பயன்படுத்துவதாக உருத்திரகுமாரன் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்க வைக்கும் இலங்கையின் வெற்றிகரமான நகர்வுகளை அனுமதிக்க வேண்டாம் என உருத்திரகுமாரன் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
கயிற்றை இந்தியா அறுத்தெறிய வேண்டிய தருணம்
ஆகவே 13ஆவது திருத்தக் கயிற்றை இந்தியா அறுத்தெறிய வேண்டிய தருணம் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பெரும்பான்மையின குடியேற்றங்களுடன் தமிழர் தாயகத்தில் இலங்கையின் ஆக்கிரமிப்பு குடியேற்றம் இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்கு விரோதமானது மற்றும் ஆபத்தானது என அவரின் கடிதத்தில் மேலும் குறிப்பட்டுள்ளது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்