முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 994 பாதுகாப்பற்ற நாடாகமாறிய இலங்கை?

 

லண்டனிலிருந்து மரண சடங்கிற்கு யாழ்ப்பாணம் வந்த சிறுவன் திடீர் உயிரிழப்பு!

JaffnaLondonUnited Kingdom
 1 மணி நேரம் முன்
Shankar

Shankar

0SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News

பிரித்தானிய தலைநகர் லண்டனிலிருந்து உறவினரின் மரண சடங்கிற்காக யாழிற்கு குடும்பத்தினருடன் வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் வடமராட்சி கிழக்கு ஆளியவளை சேர்ந்த உறவினர் உயிரிழந்த நிலையில், அவரின் மரண சடங்கிற்காக கடந்த 7 ஆம் திகதி தந்தை, தாய், மற்றும் இரு ஆண் பிள்ளைகள் லண்டனில் இருந்து வந்துள்ளனர்.

லண்டனிலிருந்து மரண சடங்கிற்கு யாழ்ப்பாணம் வந்த சிறுவன் திடீர் உயிரிழப்பு! | Boy Came To Jaffna Death Ceremony From London Died

யாழ்ப்பாணம் வத்திராயன் வடக்கைச் சேர்ந்த குருபரன், வெண்ணிலா தம்பதிகளும் அவர்களின் 9 வயது மற்றும் 6 வயது மகன்களுமே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி அவர்கள் வருகை தந்த நிலையில், விடிந்தவுடன் தந்தையும் தாயும் மரண வீட்டுக்கு சென்றுள்ளனர்.

எனினும், இரண்டு சிறுவர்களும் தமது அம்மம்மா, அம்மப்பாவுடன் வத்திராயனில் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர்.

லண்டனிலிருந்து மரண சடங்கிற்கு யாழ்ப்பாணம் வந்த சிறுவன் திடீர் உயிரிழப்பு! | Boy Came To Jaffna Death Ceremony From London Died

இந்த நிலையில், சம்பவ தினத்தன்று கடற்கரை கிராமமான வத்திராயனில் உள்ள அவர்களது பேரன் வீட்டில் சிறுவர்கள் இருவரும் விளையாடி கொண்டிருந்தனர்.

மாலை வேளையில் அம்மப்பாவுடன் கடலில் குளிப்பதற்கு சென்றுள்ளனர்.

சுட்டித்தனம் நிறைந்த சிறுவர்கள் இருவரையும் அவர்களது அம்மப்பா பாதுகாப்பாக கடலில் நீராடச்செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் வீட்டு வேலைகளில் அவர் மூழ்கியிருந்த நிலையில், சிறுவர்கள் இருவரும் அங்கு விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.

சிறிது நேரத்தின் பின்னர் அவர்களை தேநீர் பருகுவதற்கு அழைத்தபோது, குருபரன், வெண்ணிலா தம்பதிகளின் இரண்டாவது மகனான குருபரன் ஆரிஸ் அங்கு இருக்கவில்லை. பதறிப்போன உறவினர்கள் குறித்த சிறுவனை தேடி அலைந்துள்ளனர்.

இருப்பினும், சிறுவன் கிடைக்கவில்லை. லண்டனில் பிறந்து முதன்முறையாக சொந்த ஊருக்கு வந்த அந்த சிறுவனுக்கு அந்த பிரதேசம் எந்தவகையிலும் பரீட்சயமானது அல்ல. ஊரிலுள்ளவர்களையும் அவருக்கு தெரியது.

இந்த நிலையில், உறவினர்கள் ஒன்றிணைந்து தேடும்போது, அண்மையிலுள்ள ஊரான மருதங்கேணி கடற்கரையில் சிறுவன் கடல் நீருடன் அடித்துவரப்பட்டு கிடப்பதை அவதானித்துள்ளனர்.

உடனடியாக சிறுவனை மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உறவினர்கள் சிறுவனின் கால்தடத்தை அவதானித்தபோது அவர் தனியாக நடந்து கடலுக்கு குளிப்பதற்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போதே கடலில் மூழ்கி ஆரிஸ் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

லண்டனில் இருந்து தாய் தந்தையுடன் தமது உறவினர்களையும், சொந்த மண்ணையும் பார்ப்பதற்கு வந்த அந்த பிஞ்சு உயிரை கடல் அன்னை தன்பால் எடுத்துக்கொண்டால். இரண்டு குழந்தையிகளுடன் பல கனவுகளுடன் வந்த அந்த தாய் தந்தை ஒரு குழந்தையை பறிகொடுத்து தவிக்கின்றனர்.

இந்த துயர சம்பவம் பெற்றோர்கள் அனைவரும் தமது குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவேண்டும் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஆரிஸ் என்ற இந்த அழகிய குழந்தையின் இழப்பு வடமராட்சி கிழக்கு பகுதி முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?