முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 42வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் அனகமாணவர்களிற்கு பாலியல் வருத்தம்

 

கனடாவாழ் யாழ் குடும்பஸ்தரால் இரண்டுபட்ட லண்டன் தமிழ் குடும்பம்!

கனடாவாழ் யாழ் குடும்பஸ்தரால் இரண்டுபட்ட லண்டன் தமிழ் குடும்பம்! | A London Tamil Family Was Separated Canadian Man
 By Sulokshi 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

   கனடாவிலிருந்து தனது பாடசாலை நண்பியை சந்திக்கச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 40 வயதான குடும்பஸ்தர் நண்பியின் கணவனால் நையப்புடைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

யாழில் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாகவே கனடாவில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர் லண்டனில் தனது நண்பியைச் சென்ற வாரம் சந்திக்க சென்றுள்ளார்.


கண்டும் காணாததுபோல விட்ட கணவர்

லண்டன் வருவதற்கு முன்னரே கனடா குடும்பஸ்தர் தனது மனைவியுடன் தகாத முறையில் பேசுவதை கணவன் கண்காணித்து வந்திருந்தாலும் அதைப்பற்றி மனைவியிடம் கேட்காது மௌனமாக இருந்துள்ளார்.

இந் நிலையில் லண்டனுக்கு கனடா குடும்பஸ்தர் வரும் தகவலை அறிந்துகொண்டுளார். லண்டன் வந்த கனடா குடும்பஸ்தர் ஒரு நாள் விடுதியில் தங்கியிருந்த பின்னர் கணவன் இல்லாத நேரம் தனது பாடசாலை நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

கனடாவாழ் யாழ் குடும்பஸ்தரால் இரண்டுபட்ட லண்டன் தமிழ் குடும்பம்! | A London Tamil Family Was Separated Canadian Man

இரு பிள்ளைகளின் தாயான குறித்த நண்பி தனது பிள்ளைகள் மற்றும் கணவன் இல்லாத நேரத்தை வட்சப் மூலம் கனடா குடும்பஸ்தருக்கு தெரிவித்த பின்னரே கனடா குடும்பஸ்தர் நண்பியிடம் சென்றுள்ளார்.

கனடா குடும்பஸ்தர் நையப்புடைப்பு

கனடா நண்பன் வீட்டுக்குச் சென்றதை உறுதிப்படுத்திய நண்பியின் கணவன் அங்கு திடீரென புகுந்து கனடா குடும்பஸ்தர் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

கணவரின் தாக்குதலில் தலை மற்றும் முகம் ஆகியவற்றில் படுகாயங்களுக்குள்ளான கனடா குடும்பஸ்தரை பொலிசாரே மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவருகின்றது.

கனடாவாழ் யாழ் குடும்பஸ்தரால் இரண்டுபட்ட லண்டன் தமிழ் குடும்பம்! | A London Tamil Family Was Separated Canadian Man

அதன் பின்னரே சம்பவம் தொடர்பில் பாடசாலை நண்பியின் கணவனை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

கைதாகிய கணவன் தனது மனைவியின் செயற்பாடு மற்றும் குறித்த கனடா குடும்பஸ்தரின் செயற்பாடு போன்றவற்றின் ஆதாரங்களை பொலிசாரிம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் கணவனின் திட்டமிட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கணவர் சிறைக்கு செல்ல நேரிடலாம் எனவும் கூறப்படுகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?