முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 11சமுக வண்முறைகள் அதிகரித்த பாதுகாப்பற்ற நாடாக மாறிவரும் இலங்கை?

 

வைத்தியசாலைக்குள் வாள்வெட்டு -குடும்பஸ்தர் துடிதுடித்து பலி

Sri Lanka PoliceSri Lanka Police InvestigationCrime

 1 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News

கலவானை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (16) இரவு இடம்பெற்ற கத்திககுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.55 அளவில் இடம்பெற்றுள்ளதாக கலவானை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கலவான தெல்கொட கொலனியைச் சேர்ந்த தம்வல லியனகே ரணில் பிரதீப் குமார என்ற (42) வயதுடைய திருமணமானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

1990 அம்புலன்ஸ் மூலம்

வைத்தியசாலைக்குள் வாள்வெட்டு -குடும்பஸ்தர் துடிதுடித்து பலி | Family Member Killed In Hospital Stabbing

கலவான தெல்கொட பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலினால் ஒருவர் காயமடைந்து 1990 அம்புலன்ஸ் மூலம் கலவானை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதுடன் மோதலில் தொடர்புடைய ஏனைய தரப்பினரும் சிகிச்சைக்காக கலவானை ஆதார வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.

அப்போது, ​​வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் முறுகல் நிலை ஏற்பட்டு உயிரிழந்த நபர் கத்தியை எடுத்து மற்றைய நபரை குத்த முற்பட்டதாகவும், அதன் போது உயிரிழந்த நபர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும் கலவான காவல்துறையினர் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் மோதல்

வைத்தியசாலைக்குள் வாள்வெட்டு -குடும்பஸ்தர் துடிதுடித்து பலி | Family Member Killed In Hospital Stabbing

மோதலில் இருந்து தப்பிக்க முயன்ற பெண் ஒருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக கலவானை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கத்திககுத்துக்கு இலக்கான நபர் வைத்தியசாலையின் ஆண்கள் விடுதி நோக்கி ஓடியதுடன், அவரை துரத்திச் சென்ற மற்றைய நபர் ஆண்களுக்கான பிரிவில் உயிரிழந்த நபரை கத்தியால் குத்தியதாக கலவான காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கலவானை காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?