கறுப்பு என்பது எமக்கு அடையாளம் ஆகிப் போனது....
குருதியின் கலங்களில் குடிகொண்ட
நிறமது......
எங்கள் அழிப்பின் ஆரம்ப ஆதாரம் கறுப்பு யூலை.....
எங்கள் வீரத்தின் அதிஉச்சம் கறுப்பு....
நிறைமாதம் வரை நாம் நித்திரை கொண்டதும் கறுப்பு அறையில்....
விடைகொடுத்து எம் வீரர்கள் புறப்பட்டதும் கறுப்பு இருளில்....
கடலிலும் தரையிலும் நாம் காற்றாகிப் போனதும் கறுப்பு புகையோடுதானே...
.நெஞ்சோடு நஞ்சுரச நாம் நெருக்கமாதும் கறுப்பு கயிற்றோடு தானே......
கறுப்பைத்தான் நேசித்தோம்.
கறுப்பு இருளில் தான் சஞ்சரித்தோம்.
எங்கள் வலிய புயங்கள் சொல்லும்
கறுப்பு தழும்பதனை.
கறுப்பு உடைதரித்து நாம் நடந்தால்
கறுப்பு வேங்கை எனச் சொல்லும்.
நெருப்பாய் நாம் சன்னதம் கொள்ளையிலே கறுப்பு அணைத்துக் கொள்ளும்.
கறுப்பைக் கேட்டுப் பாருங்கள் யாரைப்
பிடிக்கும் என்று.
கருவறை நீங்கி கண்விழிக்கையிலே
என் தாய் இட்ட முதல் திலகம் கறுப்பு.
கறுத்த மணி, கறுப்புக் கயிறு,என கறுப்பு எமக்கு உறவாகிப் போனது.
இன்று கறுப்பு ஆகி காலனையே
சாவாக்கி சரித்திரம் படைத்தோம்.
கறுப்பு யூலை கூட நமதாகிப் போனது.
புரிகிறதா? நாம் யாரென்று?
மறந்தும் எம்மை மறந்து விடாதீர்கள்.
நாம் காற்றோடு கரும்புகையாய்
கலந்த நெருப்பு வேங்கைகள்
இல்லை இல்லை கரும் வேங்கைகள்.
வன்னியூர்,
ஆர்.ஜெ.கலா.
கருத்துகள்