முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 52 மேற்குலக இராஜதந்திரிகளை சந்திப்பதால் நன்மை கிடைக்குமா?

 

மேற்குலக இராஜதந்திரிகளை சந்திக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

 By Vanan 2 மணி நேரம் முன்மேற்குலக இராஜதந்திரிகளை சந்திக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் | Relationships Of Missing Persons Meeting Diplomats
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு இடம்பெறும் திகதி மற்றும் இடம் தொடர்பான விபரங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படமாட்டாது என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்


இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சிறிலங்கா அரசு வெளிப்படுத்தும் அதேவேளை, குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச் செய்வதன் மூலம் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமாத்திரமன்றி அரசாங்கத்தினால் நிறுவப்படுகின்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட எந்தவொரு உள்ளகப்பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், மாறாக சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக தமக்கு நீதியை வழங்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உடலங்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுடையதா எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அதற்கான நீதியையும் கோரி வருகின்றனர்.

விரைவில் விசேட சந்திப்பு

இவ்வாறானதொரு பின்னணியில் கொழும்பிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று விரைவில் இடம்பெறவுள்ளது.

அண்மையில் வடமாகாணத்திற்கு சென்ற கனேடிய உயர்ஸ்தானிகரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தித்து கலந்துரையாடியதன் தொடர்ச்சியாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?