முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 890 உயிர் இருக்கும் மட்டும் தொடர்ந்து மாவீரர்களின் கனவை நினைவாக்க பின்தொடரும் இரு எம்பிகள் இறுதியில் இந்த ஆவிகளின் கனவு நனவாகுமா?

 

தமிழருக்கு தீர்வென்றால் இந்திய நலனுக்கு ஆதரவு: வலியுறுத்தும் கஜேந்திரன் எம்.பி

 By Erimalai 33 நிமிடங்கள் முன்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Join us on our WhatsApp Group

சுயநிர்ணய அடிப்படையில் இந்தியா, தமிழ் மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுத் தர ஆதரவளித்தால், இந்திய நலனுக்காக நாம் பாடுபடுவோம் என பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பப்படவுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், 13 ஆவது திருத்தச்சட்டம் தமிழருக்குத் தீர்வல்ல எனவும், ஒற்றையாட்சியை தாண்டி தமிழ் தேசம், இறமை, சுயநிர்ணய அடிப்படையில் இந்தியா தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தர வேணடும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நேற்று (09.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

13ஆம் திருத்தச் சட்டம் 

தமிழருக்கு தீர்வென்றால் இந்திய நலனுக்கு ஆதரவு: வலியுறுத்தும் கஜேந்திரன் எம்.பி | Narendra Modi Special Letter Kajendiran Mp

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

அதனை ஒட்டி தமிழ் மக்களுடைய 75 ஆண்டுகால இனப் பிரச்சினைக்கு தீர்வு விடயத்திலே இந்தியா ஒரு காத்திரமான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கடிதம் ஒன்று யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் பொறுப்பதிகாரிடம் கையளிக்கப்பட்டவுள்ளது.

அதனுடைய பிரதி, மின்னஞ்சல் ஊடாக யாழில் உள்ள துணை தூதுவருக்கு அனுப்பப்பட்டு அதனை இந்திய பிரதமருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்ட மின்னஞ்சல் கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனுப்பப்படவுள்ள மூலப்பிரதியில் உள்ள சாராம்சங்கள் 75 வருட காலம் புரையோடிப் போய் உள்ள இனப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு தீர்வும் பொருத்தப்பாடு உடையது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 13ஆம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதனை சுட்டிக்காட்டி ஒற்றை ஆட்சியைக் கடந்து தமிழ் தேசம், இறமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டதான ஒரு தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக கடிதம் அமைந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?