முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 34 மனசாட்சி இருக்கும் யாரும் இவரை தமிழராய் ஏற்றுவிடாதீர்கள்

 

மனசாட்சி இருக்கும் யாரும் இவரை தமிழராய் ஏற்றுவிடாதீர்கள்..!

மனசாட்சி இருக்கும் யாரும் இவரை தமிழராய் ஏற்றுவிடாதீர்கள்..! | Kurundurmalai Buddhist Occupation Sivasenai Visit
 By Vanan 20 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

இப்படி பிள்ளைகளை பெற்றதற்கு என்ன பாவம் செய்தாளோ என் தமிழ் தாய்.

நெஞ்சு பொறுக்கலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துக்கொண்டால்...   

இப்படி எல்லாம் சனம் புலம்பிக்கொண்டு திரியுது. அப்படி என்ன நடந்திருக்கும்.

ஓம் இண்டைக்கு ஒரு சம்பவம் குருந்தி விகாரையென்று குருந்தூர்மலையில் புத்தரை குடியேற்றினார்கள் அல்லவா? அந்த குடியேற்ற காணிக்குள் காவி அணிந்து சிங்கள பௌத்த கைக்கூலி நானும் என்று ஒருவர் போய் நின்றிருக்கிறார் பாருங்களேன்.   


நேற்று முந்தநாள் பிள்ளையார் கோவிலுக்குள் விகாரை, சவேந்திர சில்வா ஆக்கிரமிப்பாளர் இப்படியெல்லாம் கதையளந்தவர் இன்று சிங்கள தேரருடன் சேர்ந்து பழைய குருடி கதைய திறவடி என்பது போல அகற்றப்பட்ட சிலையொன்றை தூக்கி வைத்தாராம். 

இவரைப் பொறுத்தவரை ஒரு பெயர் இருக்கிறது.  முல்லைக்கு தேர் குடுத்த பாரி கேள்விப்பட்டிருப்பீர்கள், மயிலுக்கு போர்வை ஈந்த பேகனைக்கூட தெரிந்திருக்கும். பிக்குவுக்கு வேட்டியீந்த கோமகனைத் தெரியுமா? அவர் இவர் தான்.  கொஞ்ச காலத்திற்கு முன் நடந்து போன கதை.

மனசாட்சி இருக்கும் யாரும் இவரை தமிழராய் ஏற்றுவிடாதீர்கள்..! | Kurundurmalai Buddhist Occupation Sivasenai Visit

அது இருக்கட்டும் இப்போது என்னவென்றால், சிவசேனை என்று பெயர் வைத்துக்கொண்டு சிவன்கோவிலை இடித்து தள்ளிக்கொண்டிப்பவர்களோடு உறவு கொள்ளப்போயிருக்கிறார் இந்த பெரிய மனிதர்.   

மனசாட்சி இருக்கும் யாரும் இவரை தமிழராய் ஏற்றுவிடாதீர்கள்..! | Kurundurmalai Buddhist Occupation Sivasenai Visit

போன கிழமை பொங்கல் பானையை எட்டி காலால் உதைத்தார்கள் அதைக் கேட்க வக்கில்லை.   

சிலமாதங்களுக்கு முன் வெடுக்குநாறி மலையில் சிவலிங்கம் இடித்தெறியப்பட்டது. அது கேட்க வக்கில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் நீராவியடியில் கோவில் வளவில் பிக்குவின் உடலை எரித்தார்கள்  அதைக் கேட்க வக்கில்லை.

தையிட்டியில் மக்கள் காணியில் குடியேறிய புத்தர்.. அதைக் கேட்க வக்கில்லை.

கிழக்கில் மத்தளமலையில் புத்தரின் பெயரால் நடந்த அலங்காரங்களை கேட்க வக்கில்லை.

மலைநீலியம்மன் ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நடுவீதியில் கிடத்தப்பட்டு புத்தர் குடியேறினார் அதைக்  கேட்க வக்கில்லை.

இலங்கைத்துறை மலையில் இடம்பிடித்த புத்தர் அங்கு இருந்த கோவில் அகற்றப்பட்ட கதையைக் கேட்க வக்கில்லை.   

செம்பிமலையில் நடந்த ஆக்கிரமிப்புகள் பற்றிக் கேட்க வக்கில்லை.

மனசாட்சி இருக்கும் யாரும் இவரை தமிழராய் ஏற்றுவிடாதீர்கள்..! | Kurundurmalai Buddhist Occupation Sivasenai Visit

இப்படி வடக்கு கிழக்கில் புத்தரை குடியேற்றி நிலம்பிடிக்கும் நிலப்பேய்களை அங்கு காவியுடையில் அலையும் பூதங்களை கேட்க வக்கில்லாத இந்த சிவசேனைத் தலைவர் குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரையில் இருந்து அகற்றப்பட்ட புத்தர் சிலையை கல்கமுவ சாந்தபோதி தேரருடன் சேர்ந்து மீண்டும் நிறுவியிருக்கிறாராம்.   

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோவில் என்றாற்போல ஆண்டாண்டுகளாக எங்களை அடிமைப்படுத்த துடித்துக்கொண்டிருப்பவர்களை, ஆயிரக்கணக்கில் அந்தச் சிங்களவர்களால் அப்பாவித் தமிழர்களை கொன்ற இன்றைய யூலை 23(கருப்பு ஜூலை) இல் உறவுகொண்டாடப்போனாராம் இவர்.

மனசாட்சி இருக்கும் யாரும் இவரை தமிழராய் ஏற்றுவிடாதீர்கள்..! | Kurundurmalai Buddhist Occupation Sivasenai Visit

இவரது செயலுக்கு - மனசாட்சி இருக்கும் தமிழர் யாரும் இவரை தமிழராய் ஏற்றுவிடாதீர்கள், இவர் போல் கொஞ்ச பேர் இருந்தால் காணும் என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?