முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 10 புடின் 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்படுவார்:

 

புடின் 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்படுவார்: பரபரப்பை ஏற்படுத்திய பாபா வங்காவின் கணிப்பு

Vladimir PutinBaba Vanga
 6 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

ரஷ்ய அதிபர் புடின் 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்படுவார் என பாபா வங்காவின் கணிப்பில் கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மர்ம நோய் ஒன்றால் பெரும் பாதிப்புக்கு ஆளாவார் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாபா வங்கா பாபா வங்கா பல்கேரிய நாட்டை சேர்ந்தவர். 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.

கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது.​

பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார்.

அணு ஆயுத தாக்குதல்

புடின் 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்படுவார்: பரபரப்பை ஏற்படுத்திய பாபா வங்காவின் கணிப்பு | Baba Vangas 2024 Prophecies

பாபா வங்காக உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.​

இதனால் இவருடைய கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகின்றன. குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை பாபா வங்காவின் கணிப்புகளை நிஜமாக்கியுள்ளன.​

இதன்காரணமாக உலகின் பெரும்பாலான மக்கள் இவருடைய கணிப்புகளை உற்று நோக்கி வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா கூறிய கணிப்புகளும், கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகிறது.

அதன்படி வளர்ந்த நாடு ஒன்று அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றது போல் ரஷ்ய உக்ரைன் போர் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து வருவது பாபா வங்காவின் கணிப்போடு ஒத்துப்போகிறது.

அவரது கணிப்புப்படியே பிரிட்டன் ராணியின் மரணமும் நிகழ்ந்தது.​

பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்கள்

புடின் 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்படுவார்: பரபரப்பை ஏற்படுத்திய பாபா வங்காவின் கணிப்பு | Baba Vangas 2024 Prophecies

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி 2024 க்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​

2024 இல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புடின் குறித்த பாபா வங்காவின் கணிப்பு

புடின் 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்படுவார்: பரபரப்பை ஏற்படுத்திய பாபா வங்காவின் கணிப்பு | Baba Vangas 2024 Prophecies

அதேநேரேம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்த பாபா வங்காவின் கணிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.​

அதாவது 2024 ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

பாபா வங்காவின் இந்த கணிப்புதான் தற்போது எதிர்காலம் குறித்து அறிய ஆர்வம் காட்டுபவர்களை உலுக்கி உள்ளது. மேலும் ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

ட்ரம்புக்கு மர்ம நோய் ட்ரம்புக்கு மர்ம நோய் மேலும் 2024 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் , 2024 ஆம் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும், அது அவரை காது கேளாதவர் ஆக்கும் என்றும் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.​

புடின் 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்படுவார்: பரபரப்பை ஏற்படுத்திய பாபா வங்காவின் கணிப்பு | Baba Vangas 2024 Prophecies

2024 ஆம் ஆண்டில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள் என்றும் தனது கணிப்புகளின் மூலம் எச்சரித்துள்ளார்.​

உலகப் புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் 2024 ஆம் ஆண்டுக்கான தீர்க்கதரிசனங்கள் ருமேனிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?