பிரித்தானியாவில் காவல்துறை உத்தியோகத்தரை சுட்டு கொன்ற இலங்கையர் - நீதிமன்றம் வழங்கிய கடூழிய தண்டனை
பிரித்தானியாவில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைக் சுட்டு கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த பிரித்தானியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நேற்று(28.07.2023) பிரித்தானியாவின் நோர்தாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில், இவருக்கான தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, ‘‘இலங்கையைச் சேர்ந்த லூயிஸ் டி சொய்ஸா என்பவர், பிரித்தானியா காவல்துறை அலுவலரான சார்ஜன்ட் மாட் ரதனா என்பவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
சாகும் வரை ஆயுள் தண்டனை
54 வயதான குறித்த காவல்துறை உத்தியோகத்தர், சொய்ஸாவை கைது செய்ய தயாரானபோதே, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
2020 செப்டம்பர் 25ஆம் திகதியன்று சொய்ஸாவை வீதியில் வைத்து தடுத்த, காவல்துறை அதிகாரிகள் வெடிமருந்துகளையும் கஞ்சாவையும் அவரிடம் இருந்து கண்டெடுத்துள்ளனர்.
எனினும் அவரின் கைக்குக் கீழே மறைத்து வைத்திருந்த ஆறு தோட்டாக்கள் அடங்கிய துப்பாக்கியை காவல்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், சொய்ஸாவின் கைகளில் விலங்கிடப்பட்டிருந்த போதும், தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த அவரது துப்பாக்கியால் காவல்துறை அதிகாரியை நோக்கி சுட்டார் என்று விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்