முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 35 இலங்கையில் கைக்கூலிகளாக மாறிய தமிழர்கள் குடுக்கல் வாங்கலில் அவதானம் வேண்டும்,

 

அமைச்சரிடம் சொல்லி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன்: யாழ்ப்பாண இளைஞனுக்கு கொலை மிரட்டல்!

அமைச்சரிடம் சொல்லி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன்: யாழ்ப்பாண இளைஞனுக்கு கொலை மிரட்டல்! | Jaffna Youth Death Threats Phone From Vavuniya
 By Shankar 3 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

அமைச்சர் சரத் வீரசேகரவிடம் Sarath Weerasekara உன்னை பற்றி தவறாக கூறி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவிலிருந்து யாழ்ப்பாண இளைஞனுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வவுனியாவில் 136, பசார் வீதி, எனும் முகவரியை சேர்ந்த தேவராசா கோபாலகிருஷ்ணன் என்பவராவால் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக யாழைச் சேர்ந்த இளைஞன் இன்றைய தினம் (25-07-2023) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு இலக்கம் 2023/07/22 ம் திகதி CIB 2 212/296 எனும் இலக்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அமைச்சரிடம் சொல்லி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன்: யாழ்ப்பாண இளைஞனுக்கு கொலை மிரட்டல்! | Jaffna Youth Death Threats Phone From Vavuniya

யாழில் உள்ள குறித்த நபரின் உறவினருக்கு 2 இலட்சம் ரூபா கடனாக கொடுத்த நிலையில் அதனை தருமாறு பலமுறை கேட்ட நிலையில் வழங்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.

மேற்படி முறைப்பாடு தொடர்பாக யாழ் பொலிஸார் சம்மந்தப்பட்டவர்களுக்கு விசாரணைகள் முன்னெடுக்க அழைப்பு விடுத்த பின்னர் வவுனியா நபர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் சரத் வீரசேகரவுடன் தொடர்பு உள்ளதாகவும் தான் அவருக்கு என்னை பற்றி தவறாக கடிதம் ஒன்றை அனுப்பி என்னை இல்லாமல் செய்து விடுவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரிடம் சொல்லி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன்: யாழ்ப்பாண இளைஞனுக்கு கொலை மிரட்டல்! | Jaffna Youth Death Threats Phone From Vavuniya

இதேவேளை, தனக்கு பல அடியாட்கள் குழு இருப்பதாகவும் அவர்களை கொண்டு வந்து என்னை கொலைசெய்து விடுவேன் என்றும் தனித்தனியாக சண்டை செய்ய வா எனக்கூறியும் எனது சகோதரி மற்றும் தாயார் மற்றும் என்னை அசிங்கமான முறையில் ஏசி உள்ளார்.

நான் எனது தந்தையை இழந்த நிலையில் கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு எனது குடும்பத்தையும் பாதுகாத்து வருகிறேன்.

இந்நிலையில்,எனக்கு கொலை அச்சுறுத்தல் விடப்பட்ட நிலையில் எனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?