முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 983 இனப்படுகொலையின் ஆதாரம்

 

ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறென்ன குற்றமிழைத்தார்கள்..

 By Vanan 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

நடப்பதை எல்லாம் பார்க்கும்போது நாம் வாழ்வது ஒரு நாட்டிலா? இல்லாவிட்டால் பேய்களும் பிணம் திண்ணும் பூதங்களும் வாழும் காடுகளிலா? என்று ஒரு சந்தேகம்.

சர்வ சாதாரணமாக கொன்று புதைக்கப்பட்ட சனக்கூட்டம் ஏதோ இவர்களால் கொல்லப்படுவதற்காகவே புதைக்கப்பட்டதுபோல நிகழ்த்தி முடித்திருக்கிறார்கள்.

சிலவேளைகளில் அருகிலிருப்பவரிடம் இரக்கமே இல்லையா உங்களுக்கு என்று கேட்பதுண்டு. ஆனால் இவர்களிடம் எப்படிக்கேட்பது. இரக்கமிருப்பவர்களாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா ?

அதுபோக, பொதுவாகவே இனங்களுக்கும் நாடுகளுக்கும் வரலாறு உண்டு. அது நீண்ட தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாகவே இருக்கும்.

மனித புதைகுழி

ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறென்ன குற்றமிழைத்தார்கள்.. | Human Remains Found In Mullaitivu Mannar Semmani

ஆனால், மனித புதைகுழிகளுக்கு வரலாறு உண்டு என்றால் அது நாம் வாழும் இந்தக் கொடிய இலங்கைத் திருநாட்டில் மட்டுமே.

அட உண்மைதான், இலங்கையில் மனித புதைகுழிகளுக்கு என்று ஒரு தனி வரலாறு உண்டு .

இலங்கையில் மன்னார் , யாழ்ப்பாணம் செம்மணி , மற்றும் திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கப்புதைகுழிகள் , மாத்தளை எனத் தொடரும் பட்டியலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியும் சேர்ந்துகொண்டுள்ளது.

செம்மணியில் கிருசாந்தியின் மரணத்தின் பின் வெளிவந்த ரகசியங்கள் போல, இப்போது நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபை கிண்டிய கிடங்கில் வெளிப்பட்டது இன்னுமொரு ஈழத்தமிழரின் அவலத்தின் குறியீடான கொக்குத்தொடுவாய் புதைகுழிகள்.

சரி இனி விடயத்திற்கு வருவோம்

ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறென்ன குற்றமிழைத்தார்கள்.. | Human Remains Found In Mullaitivu Mannar Semmani

பேய்கள் அரசாண்டால் சாத்திரங்கள் பிணம் தின்னுமாம் அதுபோலதான் சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் பட்டியல் மிக நீளம். அதிலும் குறிப்பாக அரச இராணுவம் அதன் துணைக்குழுக்கள் இவைகளின் அக்கிரமம் - இப்படி நீண்ட பட்டியலில் இந்த மனித படுகுழிகளும் ஒரு பகுதி.   

போதும் இதோட நிறுத்திக்கொண்டு இனி ஊரில என்ன கதை அடிபடுதென்று பார்ப்போம்.

பூமித்தாயின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு எவ்வளவு நாளைக்குதான் பொறுத்துக்கொள்ளுவா இது அப்பாவித்தமிழர்களின் புலம்பல் மொழிகளில் பிரதானமானது.

அதைத்தாண்டி

ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறென்ன குற்றமிழைத்தார்கள்.. | Human Remains Found In Mullaitivu Mannar Semmani

இங்கு கொல்லப்பட்டு புதைக்கப்படிருப்பவர்கள் எல்லாரும் தமிழர்கள்தான் என்பதில் சந்தேகத்திற்கு இடமேயிராது. அதிலும் புலிச்சீருடையோடு புதைக்கப்பட்டிருப்பது இன்னும்மொரு படி.

யுத்தம் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்தால் அழைத்துச்செல்லப்பட்ட ஏராளமான பெண்போராளிகளின் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகிக்கொண்டேயிருந்தன.

ஆனால் இன்றுவரை அவர்களைப் பற்றிய எந்த விதமான தகவல்களையும் இதுவரை சிறிலங்கா அரசு வெளிவிடவேயில்லை.

சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்ட, மற்றும் அவர்களிடம் கையளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளை இன்றுவரை தேடிக்கொண்டிருக்கும் தார்மார்களின் போராட்டம் 2000 ம் நாட்களைத் தாண்டி போய்க்கொண்டேயிருக்கிறது.

அவர்களைப் பற்றியும் எந்தத் தகவலுமே இல்லை. இப்படியிருக்க இந்தப் புதைகுழிகளில் வெளித்தெரியும் என்புகள் யாருடையவை?

என்ன நடந்தது

ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறென்ன குற்றமிழைத்தார்கள்.. | Human Remains Found In Mullaitivu Mannar Semmani

தேச விடுதலைக்காய் இறுதிவரை களமாடிய எண்ணற்ற போராளிகளின், குறிப்பாக பெண்போராளிகளின் ஒளிப்படங்கள் பரவலாக அன்றைய காலப்பகுதியில் காணக்கிடைத்தது.

இதுவரை அவர்களிற்கு என்ன நடந்தது என்னும் எந்த தகவல்களும் இல்லை.

தமிழர்கள் என்னும் ஒரே காரணத்தால் அவர்களையெல்லாம் கொடும் சித்திரவதைகளின் பின்னர் சிங்களம் கொன்றுபுதைத்திருக்கலாம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட தரப்பினர்.

இனவழிப்பு, போர்க்குற்றங்கள் என்பவற்றிற்கான தண்டனையினை இன்றுவரை ஒரு சிறிதளவேனும் சிங்களம் பெறவில்லை.

சிங்களத்தின் இப்போர்க்குற்றங்களை, இனவழிப்பை மூடிமறைக்க கடந்த காலங்களில் தமிழர் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், குறிப்பாக சுமந்திரன் முண்டுகொடுத்த கதையினை இங்கு நாம் நினைவில்கொள்ளல்வேண்டும்.

சிங்களத்தின் போர்க்குற்றங்களிற்கு, இனவழிப்பிற்கு தினம், தினம் ஆதாரங்கள் மனித புதைகுழிகளிலிருந்து கிடைத்துக்கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறென்ன குற்றமிழைத்தார்கள்.. | Human Remains Found In Mullaitivu Mannar Semmani

என்ன செய்யப்போகின்றது சர்வதேசம்?

என்ன செய்யப்போகிறது தமிழினம்?

இப்படியென்று ஒரு சாரரின் கேள்விகளோடு ஒரு முகநூல் பதிவு கூட அதிகம் பகிரப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

நாம் யாரைச்சொல்லி யாரை நோவது?

படைத்தவன் கண்களை மூடிக்கொண்டானா?

ஈழத்தமிழர்களை என்னவாவது செய்துவிடுங்கள் என்று...

அந்தப் புதைகுழிக்குள் இறந்தவர்கள் ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறென்ன குற்றமிழைத்தார்கள்…

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?