இலங்கையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: ஒரே நாளில் பரிதாபமாக உயிரிழந்த 3 ஆண்கள்!
By Shankar 36 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
இலங்கையில் நேற்றைய தினம் (28-07-2023) வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி மூன்று ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் மொனராகலை, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மொனராகலை - மெதகமை பகுதியில் இன்று பிற்பகல் காட்டு யானை தாக்கி 58 வயதான ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வயல் வேலைக்குச் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு இலக்கானார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, பொலனறுவை - மெதிரிகிரிய புதிய நகரத்தில் இன்று அதிகாலை வீட்டின் வெளியே வந்த 72 வயதான முதியவர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அநுராதபுரம், மஹவ பகுதியில் இன்று (28) அதிகாலை யானையை விரட்டுவதற்கு முற்பட்டபோது காட்டு யானை தாக்கி 43 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கருத்துகள்