முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 28 சர்வதேச நீதி கோரும் தமிழர்கள்

 

சர்வதேச நீதி கோரும் போராட்டத்திற்கான அரசியல்துறையின் அறைகூவல்

TamilsMullaitivuTamil naduTamil diaspora
 9 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News

சர்வதேச நீதி கோரும் போராட்டத்திற்கான அறைகூவலை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் விடுத்துள்ளனர்.

நேற்று (21) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் அறப்போருக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் பேரெழுச்சிகொள்ள வேண்டுமென கோரியுள்ளனர்.

அவ்வாறு அறிக்கையின் முழு வடிவம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது,

“அன்பார்ந்த எமது மக்களே!

உலகப் பரப்பில் வாழும் தொன்மை மிக்க இனமாகிய நாம், ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளாலும் எம்மினம் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புகளுக்காக தொடர்ந்து நீதிகோரிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆயுதப் போராட்ட காலத்திலும் அதனை தொடர்ந்த காலத்திலும் எம்மினம் மீதான இனவழிப்பு தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இவ்வாறான இனவழிப்பு சாட்சியங்களாக அவ்வப்போது எமது தாயக பிரதேசங்களிலும் சிறிலங்கா பிரதேசங்களிலும் மனிதப் புதைகுழிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவ்வாறு இனங்காணப்படும் மனிதப் புதை குழிகள் மீண்டும் புதைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு விடுகின்றது.

எந்த ஒரு ஆய்வுகளும் இன்றி, நீதி செயற்பாடுகளும் இன்றி அனைத்தும் மறைக்கப்பட்டு, மறுதலிக்கப்படுகின்றது.

இந்தச் சூழலில் எமது தாயக பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனிதப் புதைக்குழிகள் என்பது நம் இனத்துக்கு நடந்த இனவழிப்புக்கான மிகப்பெரும் ஆதார சாட்சியாகவே நாம் உணர்கின்றோம்.

எம்மால் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளின் எலும்புக் கூடுகளே அவையென நாம் உறுதியாக நம்புகின்றோம்.

கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை தவிர்த்து, எமது இனத்தின் விடுதலையே ஒரே இலட்சியம் எனும் பொது வேலைத்திட்டத்தில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், பல்கலைக்கழகங்கள், சங்கங்கள், சம்மேளனங்கள், கழகங்கள் என அனைவரும் இணைந்து தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசமெங்கும் நீதி கோரல் போராட்டத்தினை முன்னெடுக்குமாறு அரசியல்துறையாகிய நாம் அறைகூவல் விடுகின்றோம்.

எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கும் தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாகிய அறப்போருக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் பேரெழுச்சிகொள்ள வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

விடியலை நோக்கிய எமது மக்களின் பயணம் தொடரட்டும்” - என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?