முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 311 இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே தலைவன்

மஹிந்த ராஜபக்ஷ: "இலங்கையில் இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே தலைவன்"
மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை பிரதமர் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு போராட்டக்காரர்கள் விடுத்த கோரிக்கையை அந்நாடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சனிக்கிழமை நிராகரித்தார். "மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள முடியாதபோது, இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். ஒருவேளை அப்படியொரு அமைச்சரவை அமைந்தால் அதற்கு நானே தலைவன் என்றும் அவர் கூறினார். முக்கிய இறக்குமதிகளை செய்ய இயலாத வகையில் போதிய பணமின்றி இலங்கை அரசாங்கம் தவித்து வருவதாகக் கூறி ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இலங்கையின் பல்வேறு நகர வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமயாக உயர்ந்துள்ளன. எரிபொருள், மருந்துகள் மற்றும் மின்சார விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் இடைக்கால அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படுமானால், அது தனது தலைமையிலேயே ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இந்த கருத்தை அவர் வெளியிட்டார். இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க, பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சரான டளஸ் அழகபெரும கடிதமொன்றின் ஊடாக ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார். அது பற்றி அவரிடம் ஊடகவியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த பிரதமர், மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள முடியாதபோது, இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார். 'உயிரைப் பறிக்கவே சுட்டனர்' - இலங்கை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பிலிருந்து உயிர் தப்பிய ஒரு குடும்பத்தின் கதை ஒவ்வொருவருடைய கொள்கைகளும், ஒவ்வொருவருடைய இணக்கப்பாடுகளும் இல்லாமல் எவ்வாறு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியும் என மஹிந்த ராஜபக்ஷ மறுகேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அல்லது வேறு அமைச்சர்களைக் கொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு, ஏனையோர் விரும்புவார்கள் என தான் நம்பவில்லை என்றும் மஹிந்த தெரிவித்தார். பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டு வரும் கருத்து குறித்தும் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கருத்தை பிரதிபலிக்கவில்லை. வரலாறு பற்றிய தெளிவில்லாத சிலர் அவ்வாறு கூறக்கூடும் என்றார். கட்சி தொடர்பிலும், அரசியல் தொடர்பிலும் தன்னிடம் எவரும் அத்தகைய கருத்தையும் முன்வைக்கவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடு முழுவதும் ஆளும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்படுவது குறித்து கேட்டதற்கு, ''போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், தீர்வை பெற்றுக்கொடுக்க அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருகை தரவில்லை. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருகை தராதவரை போராட்டங்கள் தொடரவே செய்யும். பேச்சுவார்த்தைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அலரி மாளிகை திறந்திருக்கும். அவர்கள் வரும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டால், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் வருமாறு நான் அழைக்கிறேன்" என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?