தமிழ் மக்களுக்கு அடிப்படை மாற்றமே தேவை; அமெரிக்க தூதுவரிடம் யாழ் சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டு (Photos)
தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை கேட்கவில்லை, அடிப்படை மாற்றத்தை தான் கோருகின்றார்கள் என அமெரிக்கத்தூதுவர் ஜூலி சுங்கிடம், யாழ்.சிவில் சமூக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழிற்க்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும், யாழ். மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று மாலை இடம்பெற்றது.
இச்சந்திப்பு தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்து விதமான பிரச்சினைகளும் அமெரிக்க தூதுவருக்கு எடுத்து சொல்லப்பட்டது. கொழும்பில் பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்ததன் விளைவாக அரசியல் ரீதியான பதற்றத் தன்மையொன்று நிலவுகின்றது.
ஆனால் வடக்கு – கிழக்கில் அவ்வாறான பதற்றங்கள் இல்லை. தமிழ் மக்கள் ஏன் பெருமெடுப்பில் சிங்கள மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கெடுப்பது இல்லை என்ற கேள்வியை தூதுவர் கேட்டார்.
தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை கேட்கவில்லை. அடிப்படை மாற்றத்தை தான் கோருகின்றார்கள்.
மேலும், இலங்கையில் பல்லின பண்பை உறுதிப்படுத்தும் கட்டமைப்பு மாற்றத்தை தான் கேட்கிக்கின்றார்கள் என எம்மால் அமெரிக்க தூதுவருக்கு விளக்கம் அளித்தோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கும் போது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடந்து கொள்ளும் விதமும், சிங்கள மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் பொலிஸார் அணுகும் விதம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தமிழ் சிவில் சமூகங்களின் பிரநிதிகளாக சந்தித்தவர்கள் தமிழ் மக்களின் குறைகள் அனைத்தையும் எடுத்துக் கூறியுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்