முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 263 புலம்பெயர் தமிழர்கள் அவதானத்துடன் இருக்கவும்

விடுதலைப் புலிகளில்இருந்து கருணாவை பிரித்து அவ் அமைப்பை முற்றாக அழிப்பதற்கு அடித்தளம் இட்டவர் இவர்தான். இவரை எடுப்பதற்கு முகநூல் மூலமாக சிங்கள மக்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள்.நாட்டிற்குத் தேவையான டொலரை இவரால் மட்டுமே கொண்டு வர முடியும்!
கொழும்பு, கொள்ளுப்பிட்டி, 5 ஆம் ஒழுங்கையில் உள்ள தனது பாரம்பரிய இல்லத்தைக் கூட பெரிய அளவில் மறுசீரமைப்புச் செய்து கொள்ளவில்லை. தனகென்று இருக்கும் அந்த ஒரேயொரு வீட்டையும் தனது மரணத்தின் பின்னர் தனது பாடசாலையான ரோயல் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்து உயில் எழுதி கொடுத்து விட்டார். அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் யார் யார் என்பது பொது மக்களுக்கு பெரிதாகத் தெரியாது. அவர்கள் எவரையுமே அரசாங்கப் பதவிகளில் ஒருபோதுமே இருக்கவில்லை. வாரிசுகளும் இல்லை. வாரிசுகளுக்காக பதினான்கு தலைமுறைகளுக்கு நாட்டைக் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்க்க வேண்டிய தேவையும் அவருக்கு இல்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களனி விகாரை முழுக்க முழுக்க அவரது தாயாரின் அன்பளிப்புகள் மூலம் நிறுவப்பட்டது. அதன் நிர்வாக சபையில் நீண்ட காலம் பணியாற்றினார். பின்னர் அதிலிருந்து விரட்டவும் பட்டார். ஆனால் அந்த விகாரையையோ வேறெந்த விகாரைகளையோ அவர் ஒருபோதும் தனது அரசியலுக்கு பயன்படுத்தவில்லை. தொலைக்காட்சி மற்றும் கம்பியூட்டர்களை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்ததில் அவர்தான் முன்னோடி அவரது ஒரு சகோதரரே முதன்முதலாக ஒரு தொலைக்காட்சி ( TNL) நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்தத் தொலைகாட்சியையோ ஒருபோதும் தனது அரசியலுக்குப் பயன்படுத்தவில்லை. ஒரேயொரு தடவை அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரபல ஊடகவியலாளர் சன்னஸ்கலவின் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டார். அப்போது சன்னஸ்கல ' உங்கள் குடும்பமும் தான் தொலைகாட்சியையே நாட்டுக்குத் தந்தது. அரசாங்கத் தொலைகாட்சிக்குக் கூட நீங்கள் ஏன் இவ்வளவு காலத்தில் ஒரு தடவையேனும் வரவில்லை ?' எனக் கேட்டபோது , ஒரு புன்னைகையோடு ' என்னை யாரும் அழைக்கவில்லை ' என்றுதான் பதிலளித்தார். தோல்வி மேல் தோல்விகள் வந்த போதிலும் ஒருபோதும் துவண்டு போகவில்லை. மக்களைக் கடிந்துக்கொள்ளவில்லை, விகாரைகள் தோறும் அழுதுக்கொண்டு அரசியல் செய்யவில்லை. தனது அரசியலுக்காக ஒருபோதும் பெளத்த மதத்தையோ, சிங்கள இன உணர்வையோ, தேசப்பற்றையோ விலைக்கூறி விற்கவில்லை. அந்த மகத்தான அரசியல் ஞானிதான் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ! இவர் பிரதமராகவோ அல்லது புதிய அரசாங்கத்தில் பங்காளியாகவோ அல்லது அமைச்சராகவோ இருந்தால்தான் நாட்டிற்குத் தேவையான டொலரைக் கொண்டு வர முடியும் என்பதாக பலரும் சிலாகித்துப் பேசக் கூடியதாக இருக்கின்றதாக முகநூலில் Paul Pussellawa என்ற நபர் இந்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?