முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 270 பிரபல ஜோதிடர் தகவல்

ராஜபக்ச குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது - பிரபல ஜோதிடர் தகவல்
இலங்கையின் பல தலைமுறை தலைவர்கள் மதகுருமார் மற்றும் ஜோதிடர்களின் ஆலோசனைகளை கேட்டுவந்துள்ளனர்-ஆனால் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்காலம் முடிவிற்கு வந்துவிட்டது என சொல்வதற்கு எவரும் துணிந்ததில்லை என ஜோதிடர் சுமணதாச அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார். நீண்ட கால எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீண்டநேர மின்வெட்டு காரணமாக அரசியல்வாதிகள் தங்கள் வீடுகளும் அலுவலகங்களும் பெருமளவு மக்களால் முற்றுகையிடப்படும் நிலையை எதிர்கொள்ளும் அதேவேளை ஆன்மீக தலைவர்களும் அழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ளனர். ஜோதிடர்கள் பிரதமநிர்வாகிகளுடன் காணப்படும் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள செயற்பாட்டாளர்கள் அவர்கள் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என வேண்டும் கோள் விடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த ஜோதிடர்களில் பிரபலமாக ஒருவர் ஏற்கனவே அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் நீண்டநாள் ஜோதிடர் தற்போதைய நெருக்கடி இலங்கை அரசியலை இரண்டு தசாப்தத்திற்கும் மேல் ஆக்கிரமித்திருந்த வம்சாவளியின் வீழ்ச்சிக்கான அறிகுறி என தெரிவித்தார். இது ராஜபக்ச குடும்பத்தின் முடிவு என சுமணதாச அபயகுணவர்த்தன ஏஎப்பியிற்கு தெரிவித்தார். 2015 தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெறுவார் என தெரிவித்ததன் காரணமாக அவர் மீதான நம்பிக்கைககள் குறைவடைந்திருந்தன எனினும் இம்முறை அதிக உறுதிப்பாட்டுடன் அவர் ராஜபக்ச குடும்பத்தின் முடிவு குறித்து தெரிவித்தார். ராஜபக்சாக்கள் மோசமான முடிவை எதிர்கொள்வார்கள் என்பது ஒவ்வொரு இரண்டாம் வகுப்பு பிள்ளைக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டார். மகிந்த ராஜபக்சவின் சகோதரர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் இராணுவதளபதியும், இலங்கையின் வரலாற்று பெருமைமிக்க அனுராதபுரத்தில் உள்ள ஜோதிடர் ஒருவரிடம் நீண்டகாலமாக ஆலோசனைகளை பெற்றுவருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. ஞானஅக்காவை சந்திப்பதற்காக ஜனாதிபதி அடிக்கடி அனுராதபுரத்திற்கு செல்வார் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை அரசாங்கம் கையாண்ட விதத்தில் ஞான அக்கா செல்வாக்கு செலுத்தினார் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதம் அவரின் வழிபாட்டு இடமொன்றிற்குள் பல செயற்பாட்டாளர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்ததை தொடர்ந்து ஞான அக்கா அங்கிருந்து தப்பியோடினார். தன்னையே பாதுகாக்க முடியாதபோது ஞான அக்காவினால் எவ்வாறு ஜனாதிபதியை பாதுகாக்க முடியும் என கேள்வி எழுப்பினார் பத்தி எழுத்தாளர் குசல்பெரேரா . பல முக்கிய அரசியல்வாதிகளும் ஞானா அக்காவின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?