முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c340 அகதிகள் மீண்டும் ஆஸ்திரேலியா வர நிரந்தர தடை!

நியூசிலாந்தில் குடியமர்த்தப்படும் அகதிகள் மீண்டும் ஆஸ்திரேலியா வர நிரந்தர தடை!
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தத்தின்கீழ் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படும் அகதிகள், வாழ்நாள் முழுவதும் ஆஸ்திரேலியாவிற்கு வரமுடியாதபடி தடைவிதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட அகதிகளை, நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் அண்மையில் இருநாடுகளுக்கிடையில் எட்டப்பட்டது. இதன்படி வருடமொன்றுக்கு 150 அகதிகள் என்ற அடிப்படையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 அகதிகள் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படவுள்ளனர். தற்போது நவுறுவிலுள்ள அகதிகள், மற்றும் கடல்கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு இங்கு தற்காலிக விசாவுடன் தங்கியுள்ள அகதிகள், இந்த ஒப்பந்தத்தின்கீழ் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதற்கு தகுதிபெறுவர். இவ்வாறு நியூசிலாந்தில் குடியமர்த்தப்படும் அகதிகள், அந்நாட்டு குடியுரிமை பெற்றுக்கொண்ட பின்னர், ஆஸ்திரேலியாவிற்கு வரமுடியாதபடி நிரந்தர தடை விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின்கீழ் நியூசிலாந்து செல்லும் அகதிகள், backdoor-பின்வாசல் வழியாக மீண்டும் ஆஸ்திரேலியா வருவதற்கான வாய்ப்பு மறுக்கப்படும் என, உள்துறை அமைச்சர் Karen Andrews அவர்கள் Radio National-க்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இத்தடையைக் கொண்டுவருவதற்கு சட்டமாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள பின்னணியில், இத்தகையதொரு தடையை அரசு எவ்வாறு கொண்டுவரமுடியுமென அரசியல் அவதானிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஆனால் எதிர்கட்சியின் ஆதரவுடன் சட்டமாற்றத்தைக் கொண்டுவந்து இதனைச் சாத்தியமாக்க முடியுமென குறிப்பிடப்படுகிறது. கடல்கடந்த தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை வருடமொன்றுக்கு ஏற்றுக்கொள்ளத் தயார் என கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து அரசு அறிவித்திருந்த நிலையில், இதுகுறித்த இறுதி ஒப்பந்தம் சுமார் 9 ஆண்டுகளின்பின், கடந்த மாதம் இருநாடுகளுக்கிடையில் எட்டப்பட்டது. நியூசிலாந்தின் சலுகையை ஏற்றுக்கொண்டால் அது ஆட்கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் எனவும், ஆஸ்திரேலியா வருவதற்கான பின்வாசலாக நியூசிலாந்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் எனவும் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு, இதனை ஏற்றுக்கொள்வதற்கு இதுவரை காலமும் மறுத்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?