முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 298 சிங்கக் கொடியை தமிழர்கள் ஏற்பார்களா?

சிங்கக் கொடியின் கீழ் ஒன்றுபடுவது கடினம்:விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைப்பதற்கு ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்தும் சிங்கக் கொடியின் கீழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடுவது கடினம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குகதாஸ் தெரிவித்துள்ளார். மன்னாரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், சிங்கக்கொடி மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை. ஆனால் அது பயன்படுத்தப்படும் விதம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இனவாதத்தையும் மதவெறியையும் பரப்புவதற்கு அரசாங்கம் இந்த சிங்கக்கொடியை பயன்படுத்துகிறது. ராஜபக்ச அரசுக்கு எதிராக தெற்கில் சிங்கக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்களுடன் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் இணைந்து போராட முடியாது எனத் தெரிவித்துள்ளார். “சிங்கக் கொடியை ஆக்கிரமிக்கும் கொடியாகவே பார்க்கிறோம். எங்களுடைய நிலத்தை கையகப்படுத்த, எதோ எங்கள் தேசத்தை கைப்பற்றியதுபோல.” “நாட்டில் வாழும் அனைவருக்கும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ” இந்த நாட்டில் வாழும் தமிழர்களை சமமாக நடத்துவதற்கு அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு சிங்கள தலைவர்களும் முன்வரவில்லை என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குகதாஸ் தெரிவிக்கின்றார். “தமிழ் மக்கள் எவ்வளவோ கோரிக்கை விடுத்தாலும் இந்த ஆட்சியாளர்கள் அவர்களுக்கு சம உரிமை வழங்கமாட்டார்கள். சிங்கள மக்களுடன் இணைந்து போராடுவதற்கு முதலில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் மூலம் சம உரிமைகள் உறுதி செய்யப்படும் வரை இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?