முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 326 உக்ரைனில் அமெரிக்கா தீட்டும் திட்டம்

உக்ரைனில் அமெரிக்கா தீட்டும் திட்டம்
உக்ரைனில் ஏற்பட்ட இழப்புக்கள் மூலம் ரஷ்யாவின் தலைமைத்துவம் மீண்டும் இவ்வாறான யுத்தமொன்றுக்கு செல்லாது என நம்புவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொய்ட் ஒஸ்ரின் தெரிவித்துள்ளார். சரியான ஆதரவை வழங்கினால் ரஷ்யாவிற்கு எதிரான யுத்ததில் உக்ரைனால் வெற்றிபெற முடியும் எனக் குறிப்பிட்ட லொய்ட் ஒஸ்ரின், உக்ரைன் இராணுவத்தின் முயற்சிகளையும் பாராட்டியுள்ளார். உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்ரின் ஆகியோரை உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உக்ரைன் அரசாங்கத்திற்கு அமெரிக்காவின் பலமான ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக தமது இந்த விஜயம் அமைந்துள்ளதாக அன்டனி பிளிங்கன் கூறியுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜோ பைடனின் தலைமைத்துவம் மற்றும் தமது நாட்டிற்கு வழங்கிவரும் ஆதரவு தொடர்பில் உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் உக்ரைன் அதிபருடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்ரின், உக்ரைன் மீதான படையெடுப்பு விடயத்தில் செய்ததை போன்று மீண்டும் செய்யாத அளவிற்கு ரஷ்யாவை பலமிழப்பதை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?