முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 274 ஆட்சியாளர்களிடம் உள்ளது - சஜித் பிரேமதாச

நாட்டில் டொலர் இல்லையென்கின்றனர் ஆனாலும் ஆட்சியாளர்களிடம் உள்ளது - சஜித் பிரேமதாச
நாட்டில் டொலர் இல்லையென்கின்றனர். ஆனாலும் நிறையவே டொலர் உள்ளது. அது ஆட்சியாளர்களின் பைக்கற்றுக்களில் உள்ளது. எங்களது ஆட்சி மலரும் பட்சத்தில் அவர்களின் பைக்கற்றுக்களில் உள்ள டொலரை வெளியே கொண்டு வருவோம். என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு இந்தக் குடும்ப அரசே முழுப் பொறுப்பு. இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் மறைத்து வைக்கப்பட்ட பணம் அனைத்தும் மீட்கப்படுவது கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். அத்தகைய திருடர்களுக்குத் தண்டனை வழங்குவது துல்லியமாக நிறைவேற்றப்படும். நாட்டை கட்டியாள வேண்டிய ஆட்சியாளர்கள் மிகவும் மோசமானதொரு ஆட்சியை புரிந்து வருகின்றனர். இந்த நாட்டிலே ஆட்சியாளர்களால் நடைபெறும் களவு, பொய், வஞ்சகம், சூறையாடல், போன்ற தாக்கம் காரணமாக நாடு அதளபாதாளத்தை நோக்கி செல்கின்றது. எங்கு சென்றாலும் எரிவாயுவிற்கு வரிசை, பெற்றோல் டீசலுக்கு வரிசை, பிள்ளைகளுக்கான மாவிற்கு வரிசை, விவசாயிகள் பசளைக்கு வரிசை, சீனிக்கு பருப்புக்கு வரிசை அந்த அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் சிதைவடைந்துள்ளது. இந்த அரசாங்கத்தின் மிகவும் கீழ்த்தரமான அரசியல் காரணமாகவே இந்த நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை இல்லாது செய்து அவர்களின் வயிற்றில் அடித்துள்ளனர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிச்சயமாக மேற்கொள்ளப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை மூலம் அரசையும் ஜனாதிபதியையும் தோற்கடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு மாத்திரம் நின்று விடாமல் இருபதாம் திருத்தம் மாற்றப்பட்டு, பத்தொன்பதாவது திருத்தத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.” என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?