தமிழர்களின் நியாய மறுப்பால் இலங்கைக்கு திண்டாட்டம்
தமிழர்களுக்கு உரித்தான நியாயமான விடயங்களை மறுத்த காரணத்தினால் தான் தேசிய இனப்பிரச்சினை இன்று தொடர்கிறது. ஜனநாயக ரீதியான வழிமுறைகள் எல்லாம் தோல்வியடைந்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தமிழர்கள் ஆயுதம் தூக்க தள்ளப்பட்டார்கள்.
அதனால் தான் யுத்தம் நடந்தது. யுத்தம் நடத்த காரணத்தினால் தான் நாடு அதளபாதாளத்தில் விழ்ந்தது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது மட்டும்மல்ல, யுத்த வெற்றி காரணமாக தான் “துட்டகைமுனு மறு அவதாரம்” என்ற ஒரு பட்டத்தை தானாகவே கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் பெற்றார்கள். ஆகவே தான் நாடு இந்த நிலைக்கு வந்திருக்கின்றது.
அதற்கு காரணம் தமிழர்களுக்கு நியாயம் வழங்க மறுத்தது தான்.
ஒரு பிரதேச சபை தலைவர் அனுபவம் இல்லாத ஒரு நபரை, ஒரு அடி முட்டாளை, நாட்டின் அரச தலைவர் ஆக்கிவிட்டு இப்போது திண்டாடுகின்றீர்கள் என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கும் விடயங்கள் காணொளி வடிவில்
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்