முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 350 இலங்கையில் மஹிந்த இல்லாத அமைச்சரவையா?

இலங்கையில் மஹிந்த இல்லாத அமைச்சரவையா? சிறிசேனவின் தகவலுடன் முரண்படும்
இலங்கையில் தற்போது நீடித்து வரும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லாத புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிசீலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற முறையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய இணக்க அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து அனைத்து கட்சிகளுடன் விரைவில் பேசும் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என்று கூறினார். இலங்கையில் மஹிந்த இல்லாத புதிய அமைச்சரவை கொண்ட இடைக்கால அரசு, 15 முதல் 20 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மனித உரிமை ஆர்வலர் மஹிந்த: ராஜபக்ஷக்கள் வளர்ந்த கதை இலங்கை போராட்டக் களத்தில் மருத்துவ உதவி செய்யும் தமிழ் இளைஞர் தமது கட்சியின் யோசனைக்கு அமைய, தேசிய சபையை அமைக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்ததாக மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். தேசிய இணக்க அரசாங்கம் இதேவேளை, தேசிய இணக்க அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயல்படும் கட்சிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று விசேட கலந்துரையாடலொன்றை நடத்தினார். ஜனாதிபதி மாளிகையில் இன்று சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது தேசிய இணக்க அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து யோசனை முன்மொழியப்பட்டது. அதற்கு சாதகமான நிலைப்பாட்டை ஜனாதிபதி கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கூறுகிறார். கோட்டாபய ராஜபக்ச பட மூலாதாரம்,GETTY IMAGES தேசிய இணக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்ற தேசிய சபை அமைக்கப்பட்டு, அதன் மூலம் பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து விரிவாகப் பேசிய அவர், ''ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய எமது கட்சிகளின் இணக்கத்துடன் தேசிய இணக்க அரசாங்கம் என பெயரிட நாம் தீர்மானித்துள்ளோம். ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் தேசிய இணக்க அரசாங்கத்துடன் இணையும் அனைத்து கட்சி தலைவர்களுடனான தேசிய சபையொன்று உருவாக்கப்படும். அந்த தேசிய சபையின் ஊடாகவே, தேசிய இணக்க அரசாங்கத்தின் பிரதமர் யார் என்பது தீர்மானிக்கப்படும். நாடு இந்த பிரச்னையிலிருந்து மீள்வதற்கும், மக்களின் நன்மதிப்பை வென்றெடுப்பதற்கும் அமைச்சு பொறுப்புக்கள் எத்தனை வேண்டும் என்பதை அந்த தேசிய சபையே தீர்மானிக்கும். அத்துடன், அமைச்சு பொறுப்புக்களை யார் யார் வகிக்க வேண்டும் என்பதும் அந்த தேசிய சபையே தீர்மானிக்கும். அதேபோன்று, இராஜாங்க அமைச்சு பொறுப்புக்கள் எத்தனை வேண்டும் என்பதையும் அந்த தேசிய சபையே தீர்மானிக்கும். அந்த இராஜாங்க அமைச்சர்கள் யார் என்பதையும் அந்த தேசிய சபையே தீர்மானிக்கும். அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்களையும் அந்த தேசிய சபையே தீர்மானிக்கும். இன்றைய தினம் மிகவும் வெற்றிகரமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது" என்கிறார். இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், தாம் பதவி விலக போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் மஹிந்தவும் தொடர்ச்சியாக கூறுகின்றனர். இத்தகைய சூழலில் ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கோட்டாபய சந்தித்துப் பேசி வருவது இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. முரண்படும் தகவல் இதற்கிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக்குவது குறித்து எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வாசுதேவ நாணயக்கார
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சர்வ கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தே இன்றைய தினம் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, இந்த திட்டத்திற்கு அவர்களையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளை எடுப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?