முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 294 பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் - 2022

பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் - 2022
தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் நிகழ்வும் 34வது ஆண்டு தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவு நிகழ்வும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Woodrige என்ற இடத்தில் 19/04/2022 இரவு 7 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. நினைவு நிகழ்வை ஆரம்பிக்கும் முகமாக பொதுச் சுடரை திரு.பிரபா அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்திரேலியாத் தேசியக்கொடியை திரு.பார்த்தீபன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் பழங்குடி மக்களின் தேசியக்கொடியை திரு.அனுசன் அவர்கள் ஏற்றி வைத்தார். இறுதியாகத் தமிழீழத் தேசியக்கொடியை திரு.மோகன்ராஜ் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் இந்தியா இலங்கை இராணுவத்திற்கு எதிராகப் போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும், அதன்பால் கொல்லப்பட்ட எமது மக்களிற்கும், இதே நாள் தனது உயிரை அர்ப்பணித்த அன்னை பூபதி அவர்கட்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைத்து நிகழ்வுகளும் மண்டபம் உள்ளே நடைபெற்றது. அதில் அன்னை பூபதி அவர்களின் பிரதான ஈகைச்சுடரை திருமதி. செளமியா அவர்கள் ஏற்றி வைத்தார். அன்னை பூபதி அவர்களின் பிரதான மலர் மாலையை திரு.முரளிதரன் அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினார்கள். அன்னை பூபதி அவர்களின் சிறப்பு உரையை திருமதி.செளமியா அவர்கள் ஆற்றினார். அன்னை பூபதி அவர்களின் வரலாறு பற்றி சகோதரர்களான செல்வி.டக்க்ஷிகா செல்வன். ரதுஜன் ஆகியோர் இணைந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் நினைவுப்பகிர்வு ஒன்றை வழங்கினர். இரவு 8.30 மணிக்கு அனைத்து நிகழ்வுகளும் நிறைவிற்குவந்தன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?