முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 271 யுக்ரேனின் தாக்குதலில் தூள்தூளாகும் ரஷ்ய டாங்கிகள்

ஜாவெலின், NLAW ஏவுகணை: யுக்ரேனின் தாக்குதலில் தூள்தூளாகும் ரஷ்ய டாங்கிகள் - காரணங்கள்
கீயவ் அருகே சிதறிப்போன ரஷ்ய டாங்கியின் மீது யுக்ரேன் வீரர் யுக்ரேனை ஆக்கிரமித்த இரண்டு மாதங்களுக்குள் ரஷ்யா நூற்றுக்கணக்கான டாங்கிகளை இழந்துவிட்டது. ரஷ்யா தனது டாங்கிகளை மோசமான முறைகளில் பயன்படுத்தியதும், யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய டாங்கி அழிப்பு ஆயுதங்களுமே இந்த இழப்புகளுக்குக் காரணம் என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். எத்தனை டாங்கிகளை ரஷ்யா இழந்திருக்கிறது? ரஷ்யா 680 க்கும் மேற்பட்ட டாங்கிகளை இழந்துள்ளதாக யுக்ரேனின் ராணுவம் கூறுகிறது. போர்க் களத்தில் இருந்து கிடைத்த புகைப்படங்களை ஆய்வு செய்த ஓரிக்ஸ் எனப்படும் ராணுவ மற்றும் உளவுச் செய்திகளை வெளியிடும் வலைத்தளம், ரஷ்யா சுமார் 460 டாங்கிகளையும், 2 ஆயிரம் கவச வாகனங்களையும் இழந்திருப்பதாகப்பதிவு செய்திருக்கிறது. விளம்பரம் போர் தொடங்கிய போது, ரஷ்யாவிடம் மொத்தம் 2700 டாங்கிகள் இருந்ததாக ராண்ட் கார்ப்பரேஷன் மற்றும் ஐஐஎஸ்எஸ் (இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ்) ஆகியவை தெரிவிக்கின்றன. பிரம்மாண்ட ரஷ்யப் போர்க்கப்பல் மூழ்கியது: யுக்ரேன் தாக்கியதா? இந்த கப்பலின் பலம் என்ன? யுக்ரேனில் 34,000 யூதர்களை சுட்டுக் கொன்ற ஹிட்லரின் நாஜிப் படை யுக்ரேன் போர்: போர்தந்திர அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துமா? டாங்கி அழிப்பு ஆயுதங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தன? மோதலின் தொடக்கத்தில் அமெரிக்கா யுக்ரேனுக்கு 2,000 ஜாவெலின் என்ற டாங்கி அழிப்பு ஏவுகணைகளை வழங்கியது. சுமார் 2,000 ஏவுகணைகளையும் அனுப்பியது. டாங்கிகளில் நான்கு புறத்திலும் கடினமான பொருள்களால் கவசம் உருவாக்கப்பட்டிருக்கும். பாதுகாப்பு அதிகம். ஆனால் மேற்புறம் பலவீனமாக இருக்கும். ஜாவெலின் ஏவுகணைகளை மேற்புறமாகத் தாக்குவது போல ஏவ முடியும் என்று ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் கூறுகிறது. டாங்கி ஏவுகணை
ஜாவெலின் ஏவுகணைகள் ஏராளமான ரஷ்ய டாங்கிகளை அழித்திருக்கின்றன சாதாரண ஏவுகணைகள் வந்து தாக்கும்போது அதன் பாதிப்பை தாங்கும் அளவுக்கு ரஷ்ய டாங்கிகளில் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் ஜாவெலின் ஏவுகணைகளில் இரண்டு தொகுப்பு வெடிபொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று கவசத்தைப் பிளக்கிறது. இரண்டாவது வெடிபொருள் டாங்கியின் அடிப்பாகத்தைத் துளைக்கிறது. ஜாவெலின் தவிர நவீன 3,600 இலகு ரக டாங்கி அழிப்பு ஏவுகணைகளை (NLAW) யுக்ரேனுக்கு பிரிட்டன் வழங்கியிருக்கிறது. இவை டாங்கிகளின் மேல் இருக்கும் திறப்புக்கு அருகே செல்லும்போது வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. "ஜாவெலின் மற்றும் NLAW ஆகிய ஏவுகணைகள் மிகவும் ஆற்றல் மிக்கவை" என்று கூறுகிறார் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டில் (RUSI) நிலப் போர் ஆய்வாளராக இருக்கும் நிக் ரெனால்ட்ஸ். "இந்த முக்கியமான ஆயுத உதவி இல்லாதிருந்தால், யுக்ரேனின் நிலைமை மிகவும் மாறுபட்டு இருந்திருக்கும்." என்கிறார் அவர். ஏவுகணை அமெரிக்கா யுக்ரேனுக்கு 100 ஸ்விட்ச்ப்ளேட் டாங்கி அழிப்பு ட்ரோன்களை வழங்குகிறது. "காமிகேஸ்" ட்ரோன்கள் என்று அழைக்கப்படும் அவற்றை மிகத் தொலைவில் இருந்து இயக்கலாம். முதலில் இலக்குக்கு மேல் வட்டமிடும். பின்னர் தனது முனையில் உள்ள வெடிபொருளை டாங்கியின் மீது போட்டு அதை அழித்துவிடும். ரஷ்யாவின் போர்த் தந்திரங்களில் என்ன தவறு ஏற்பட்டது? தற்காலத்தில் ரஷ்ய ராணுவம் பட்டாலியன் தந்திரோபாயக் குழுக்களை (BTG) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. டாங்கிகள், காலாட்படை, பீரங்கிகள் ஆகியவற்றை இந்தப் படைப் பிரிவுகள் கொண்டிருக்கும். இந்தப் படைப்பிரிவுகளின் அமைப்பு வேறுபட்டிருக்கலாம், ஆனால் பொதுவாக அதிக எண்ணிக்கையிலான கவச வாகனங்கள் இவற்றில் இருக்கும். காலாட்படை குறைந்த அளவிலேயே இருக்கும். டாங்கி ஏவுகணை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டாங்கியின் மேற்பகுதி ஒப்பீட்டளவில் பாதுகாப்பு குறைந்தது "ரஷ்யாவுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த அளவே படை வீரர்கள் உள்ளனர்" என்கிறார் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் மூலோபாய ஆய்வுகளின் பேராசிரியரான பிலிப்ஸ் ஓ'பிரையன். எனவே டாங்குகள், பீரங்கிகள் போன்றவற்றைக் கொண்ட BTG குழுவை உருவாக்குவது ஒரு எளிய வழியாகும். "அவை ஏராளமான குண்டுகளை வீசிக் கொண்டே வேகமாகத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இத்தகையை கவச வாகனங்களை வழிநடத்திச் செல்வதற்கும் கவசப் பகுதி தாக்குதலுக்கு உள்ளானால் பதிலடி கொடுப்பதற்கும் போதுமான காலாட்படை வீரர்கள் இருப்பதில்லை" என்று அவர் கூறுகிறார். "இதனால் ரஷ்ய ராணுவம் வலதுபுறம் சிறந்து குத்துகளைவிடும் திறன் கொண்ட, அதே நேரத்தில் கண்ணாடியால் ஆன தாடையைக் கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரரைப் போல ஆகிவிடுகிறது" ரஷ்ய விமானங்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடாததால், யுக்ரேனிய துருப்புக்கள் ரஷ்ய டாங்கிகள் செல்லும் வழிகளில் பதுங்கியிருந்து அவற்றின் மீது திடீர் தாக்குதல்களை நடத்துவது எளிதாகிறது. ரஷ்யப் படையில் எவ்வளவு திறமையின்மை இருக்கிறது? ஓரிக்ஸ் தளத்தின் புள்ளிவிவரங்களின்படி, ரஷ்யா இழந்த டாங்கிகளில் பாதி எதிரிகளால் அழிக்கப்படவில்லை. அவை பிடிபட்டிருக்கின்றன அல்லது கைவிடப்பட்டிருக்கின்றன. வல்லுநர்கள் இதற்கு ரஷ்ய துருப்புக்களின் திறமையின்மையே காரணம் என்று குறிப்பிடுகின்றனர். டிராக்டரில் இழுத்துச் செல்லப்படும் ரஷ்ய டாங்கி "யுக்ரேனிய விவசாயிகள் தங்களது டிராக்டர்களைக் கொண்டு ரஷ்ய டாங்குகளை இழுத்துச் செல்லும் படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்" என்கிறார் ஓ'பிரைன். "அந்த டாங்கிகளில் சில எரிபொருள் தீர்ந்துவிட்டதால் கைவிடப்பட்டவை. அது ஒரு தளவாடத் திட்டத்தின் தோல்வி. சில மழைக்காலச் சேற்றில் சிக்கிக்கொண்டன. ஏனென்றால் ஆண்டின் தவறான நேரத்தில் ரஷ்யா படையெடுத்திருக்கிறது." "மோசமாக ஓட்டியதன் காரணமாகவே பல டாங்கிகளை கைவிட நேர்ந்திருக்கிறது. சில பாலங்களில் தவறி விழுந்திருக்கின்றன. மற்றவை பள்ளங்களில் கவிழ்ந்திருக்கின்றன. " என்கிறார் நிக் ரெனால்ட்ஸ். "பெரும்பாலான வீரர்களுக்கு போரிடுவதில் விருப்பமே இல்லை. இதனால்தங்கள் வாகனங்களை வெறுமனே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்." என்கிறார் அவர். கைவிடப்பட்ட ராணுவ வாகனங்களை மக்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பது பற்றி யுக்ரேனிய அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது.
இதுபோன்ற "போர் வெற்றிக் கோப்பைகள்" கிடைத்தால் அவற்றை வருமான வரி தாக்கல் செய்யும்போது குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?