கனடாவில் இருந்து சென்னை சென்ற புலம்பெயர் இலங்கை தமிழர் மர்மமான முறையில் மரணம்
கனடா வாழ் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13ம் திகதி சென்ற நிலையில் குறித்த இளைஞர் மர்மமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
35 வயதான மகிந்தன் தயாபரராஜா எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தேனீர் வாங்குவதற்காக விடுதியை விட்டு வெளியே சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து காணாமல்போன 3 நாட்களின் பின்னர் மேல் மருவத்தூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் வீதியோரம் மகிந்தன் தயாபரராஜா வீழ்ந்து கிடந்துள்ளார்.
வீதியோரத்தில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞரை வீதியால் சென்ற மருத்துவர் ஒருவரும், அங்கு இருந்தவர்களும் இலவச நோயாளர் காவு வண்டி எண் 108 இற்கு தகவல் தெரிவித்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் 17ம் திகதி அதிகாலை 5 மணி அளவில் குறித்த இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞரை மேல்மருவத்தூரில் இருந்து செங்கல்பட்டுவரை அழைத்துச் சென்றது யார் என்பது இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்