முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d83 மீண்டும் எரிக் சொல்ஹெய்ம்யார் மீது இலக்கு?

கொழும்பில் ரகசிய சந்திப்பு - அரசாங்கம் வெளியிட்ட தகவல்
இலங்கைக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் விஜயம் செய்கின்றமை தொடர்பில் அச்சமடையத் தேவையில்லையெனவும், ஓர் சுயாதீன அரசாங்கம் என்ற வகையில் ஏனைய அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய தேவை இல்லையெனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்மின் இலங்கைக்கான விஜயம் புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய பந்துல குணவர்தன, இராஜதந்திரிகளின் விஜயம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இலங்கை அனைத்து நாடுகளுடனும் பிரிவினையற்ற வெளியுறவுக் கொள்கைக்கு அமைவாகவே செயற்படுவதாகவும் தெரிவித்தார். எரிக் சொல்ஹெய்ம் இலங்கை விஜயம் எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் ரகசிய சந்திப்பு - அரசாங்கம் வெளியிட்ட தகவல் | Eric Solheim Secret Meeting In Colombo எரிக் சொல்ஹெய்ம் நேற்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், பேச்சுக்களையும் முன்னெடுக்கவுள்ளார். அத்துடன், இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக உறுதித்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்காக வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாக ஆய்வுகளையும் மேற்கொள்ளவுள்ளார். சமாதான பேச்சுவார்த்தை எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் ரகசிய சந்திப்பு - அரசாங்கம் வெளியிட்ட தகவல் | Eric Solheim Secret Meeting In Colombo இதேவேளை, நோர்வேயின் இராஜதந்திரியான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான நோர்வேயின் வெளிவிவகார ஆலோசகராக கடந்த 2000 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ஏற்பாட்டாளராகவும் அவர் செயற்பட்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் அவரின் செயற்பாடுகளுக்கு தென்னிலங்கையில் சிங்கள பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?