முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d62 சிறிலங்கா அரசாங்கம் தகவல்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுவிக்கும் நடவடிக்கை! சிறிலங்கா அரசாங்கம் தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுவித்தல் உள்ளிட்ட ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்ட பின்னணியில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கம் இணங்கிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தவறிவந்த நிலையில், நேற்றைய தீர்மான நிறைவேற்றத்தின் பின்னர் சாதகமான பதிலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பிரதமரின் கருத்து விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுவிக்கும் நடவடிக்கை! சிறிலங்கா அரசாங்கம் தகவல் | Ltte Sri Lanka Government Unrch Dicision இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுவிக்கும் வகையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதும் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கைதிகளை விடுவிப்பதற்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தேவையான வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுவிக்கும் நடவடிக்கை! சிறிலங்கா அரசாங்கம் தகவல் | Ltte Sri Lanka Government Unrch Dicision நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார். இலங்கை தனது உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை சிறிலங்கா எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக பீரிஸ் தெரிவித்துள்ளார். கட்டார், ஐக்கிய அரபு இராட்சியம் போன்ற நாடுகள் மற்றும் மலேசியா, இந்தோனேஷியா போன்ற சில ஆசிய நாடுகளின் ஆதரவை கூட பெறுவதற்கு இலங்கை தவறியிருப்பது கவலையளிக்கிறது என்று பீரிஸ் கூறினார். எனினும் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை எனவும், சில நாடுகள் தமது நாடுகளின் சர்வதேச மற்றும் உள்நாட்டு கொள்கைகளை மதிக்கும் வகையில் வாக்களிப்பதில் இருந்து விலகியுள்ளதாக பிரதமர் தினேஷ் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிட்ட நாடுகள் எடுக்கும் முடிவு இலங்கை தொடர்பான வர்த்தகம், உதவி அல்லது வேறு எந்த விடயத்தையும் பாதிக்காது என சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?