முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 128 மூவர் கட்டுநாயக்காவில் கைது

பிரான்ஸ், ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்காவில் கைது
படகு மூலம் பிரான்ஸுக்கு சொந்தமான ரீயூனியன் தீவை அடைந்து அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் பிரான்ஸுக்குள் நுழைய தயாராக இருந்த இருவர் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதேவேளை சட்டவிரோதமாக ஜப்பானுக்குள் நுழைந்து அங்கு 11 வருடங்கள் வாழ்ந்து வந்தவரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் பிரான்ஸ், ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்காவில் கைது | Two Deported From Reunion Island One From Japan குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் இந்த மூவரையும் செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது கைது செய்துள்ளனர். பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் ஆராச்சிக்கட்டுவ பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞரும் பங்கதெனிய சின்னக்கருவைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும் ஆவர். 2018 ஆம் ஆண்டு இறுதியில் சிலாபத்தில் இருந்து படகு மூலம் இவர்கள் பிரான்ஸ் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரான்ஸுக்கு பிரவேசிக்க ரீயூனியன் தீவுக்குச் சென்ற எழுபத்தி இரண்டு பேர் ரீயூனியன் தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு 2019 பெப்ரவரி 14ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் பல்வேறு காரணங்களை முன்வைத்து இதுவரை அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஜப்பானில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர் பிரான்ஸ், ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்காவில் கைது | Two Deported From Reunion Island One From Japan ஜப்பானில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர் நொச்சியாகம உடுநுவர கொலனியை வசிப்பிடமாகக் கொண்டவர். 37 வயதான இந்த நபர் கடந்த 2011ஆம் ஆண்டு இரகசியமாக ஜப்பானுக்கு சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?