முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 82 மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற அதிபர் - தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடுமை By Sumithiran 2 மணி நேரம் முன் 0 SHARES Follow us on Google News விளம்பரம் பாடசாலை அதிபர் கைது உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்றதாக தெரிவித்து பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றார்.இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி மாணவியை தனது அலுவலகத்திற்கு அழைத்த அதிபர், மாணவியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்த முயன்றுள்ளார்.இதனையடுத்து மாணவி அதிபரின் பிடியிலிருந்து தப்பி சென்றுள்ளார். மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற அதிபர் - தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடுமை | Principal Tried To Sexually Assault The Student சம்பவம் தொடர்பில் அறிந்த நான்குபேர் அடங்கிய குழுவினர் கடந்த நான்காம் திகதி தம்மை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் எனத் தெரிவித்து பாடசாலைக்குள் புகுந்து அதிபரை தாக்கியதுடன் காணொளியையும் பதிவு செய்துள்ளனர். அதிபர் மீது தாக்குதல் மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற அதிபர் - தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடுமை | Principal Tried To Sexually Assault The Student அதிபர் மீதான தாக்குதல் அடங்கிய காணொளி வெளியான நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி நேற்றையதினம்(10) மட்டக்களப்பு தலைமையக காவல்துறைக்கு சென்று அதிபருக்கு எதிராக முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்த காவல்துறையினர் அதிபரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேவேளை, சிஐடி என கூறியபடி வந்து தன்மீது தாக்குதல் நடத்தியவர்களை தனக்குத் தெரியாது என காவல்துறையிடம் தெரிவித்த அதிபர், வெளியாகிய காணொளியை ஆதாரமாக வழங்கி காவல் நிலையத்தில் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்

மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற அதிபர் - தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடுமை
பாடசாலை அதிபர் கைது உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்றதாக தெரிவித்து பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றார்.இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி மாணவியை தனது அலுவலகத்திற்கு அழைத்த அதிபர், மாணவியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்த முயன்றுள்ளார்.இதனையடுத்து மாணவி அதிபரின் பிடியிலிருந்து தப்பி சென்றுள்ளார். மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற அதிபர் - தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடுமை | Principal Tried To Sexually Assault The Student சம்பவம் தொடர்பில் அறிந்த நான்குபேர் அடங்கிய குழுவினர் கடந்த நான்காம் திகதி தம்மை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் எனத் தெரிவித்து பாடசாலைக்குள் புகுந்து அதிபரை தாக்கியதுடன் காணொளியையும் பதிவு செய்துள்ளனர். அதிபர் மீதான தாக்குதல் அடங்கிய காணொளி வெளியான நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி நேற்றையதினம்(10) மட்டக்களப்பு தலைமையக காவல்துறைக்கு சென்று அதிபருக்கு எதிராக முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்த காவல்துறையினர் அதிபரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேவேளை, சிஐடி என கூறியபடி வந்து தன்மீது தாக்குதல் நடத்தியவர்களை தனக்குத் தெரியாது என காவல்துறையிடம் தெரிவித்த அதிபர், வெளியாகிய காணொளியை ஆதாரமாக வழங்கி காவல் நிலையத்தில் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?