விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் சுட்டுக்கொலை
அஹூங்கல்ல பகுதியில் நேற்றைய தினம் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது விசேட அதிரடிப் படையினரால் சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
காரில் வந்தவரால் துப்பாக்கிசூடு
விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் சுட்டுக்கொலை | Stf Shoots Down Ahungalle Shooter
நேற்றைய தினம் அஹூங்கல்ல பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர் மீது காரில் வந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. துப்பாக்கிச் சூட்டில் 43 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் தப்பிச் செல்வதற்கு முன்னர் காயமடைந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் சில நிமிடங்கள் பிரதான சாலையில் போராடி, பின்னர் அவரது பிடியில் இருந்து தப்பினார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவைகள் ஏழை மீட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
32 பேர் சுட்டுக்கொலை
விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் சுட்டுக்கொலை | Stf Shoots Down Ahungalle Shooter
2022 மே 31 முதல், இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வன்முறை கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 32 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்