முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 70 ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில்

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் thunderstorm ஆஸ்துமா எனப்படும் கொடிய ஆஸ்துமா நோய்த்தாக்கம் மீண்டும் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
காற்றில் மகரந்த துணிக்கைகளின் செறிவு கூடும்போது குளிர்காற்றும் சேர்ந்துகொண்டால் இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக ஏற்கனவே பல சுகாதார அமைப்புக்கள் அறிவித்திருந்தன. வசந்த காலத்தில் பூக்களிலிருந்தும் மரங்களிலிருந்தும் காற்றில் பரவும் மகரந்த துணிக்கைகள், சுவாசத்துடன் கலந்துகொள்வதால் ஏற்படுகின்ற ஆஸ்துமா வியாதியால் பாதிக்கப்படுகின்றவர்கள், Thunderstorm ஆஸ்துமா மூலம் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று ஆஸ்திரேலிய சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். Advertisement La Nina காரணமாக இந்த ஆண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டில் அதிக மழைவீழ்ச்சி காணப்படுகின்ற பின்னணியில், அதிக மகரந்த எண்ணிக்கை, ஈரப்பதம் மற்றும் மழை ஆகியவை Thunderstorm ஆஸ்துமா ஏற்படுவதற்கு வழிவகுக்கும் காரணிகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், உள்ளிட்ட தென்கிழக்கு கரையில் அதிகரித்துவரும் சீரற்ற வானிலையும் காற்றும் thunderstorm ஆஸ்துமா தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. வானிலை மாற்றங்கள் மற்றும் ஏனைய காரணங்களினால் மூச்செடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்குபவர்கள் மற்றும் ஆஸ்துமா நோயுள்ளவர்கள் இந்த தாக்குதலில் இருந்து தப்புவதற்கு எந்நேரமும் puffers போன்றவற்றை கையோடு வைத்திருக்கும்டி சுகாதர தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் 23 Thunderstorm ஆஸ்துமா தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் 10 ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2016 ஆம் இடம்பெற்ற Thunderstorm ஆஸ்துமா தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சுமார் 1400 பேர் நாடெங்கிலுமுள்ள பல்வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும், அவர்களில் மெல்பனில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?