முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 49 புலிகளின் மெய்யான வாரிசுகள் யார்?குழப்பத்தில் தமிழர்கள்,

விடுதலைப் புலிகள் அமைப்பின் மெய்யான வாரிசுகள் யார்..! திலீபன் போன்று தியாகத்துக்கு தயாரா..!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் மெய்யான வாரிசுகள் யார்? அதற்கு யார் உரித்துடையவர்கள்? எனும் பிரச்சினை காரணமாகத்தான் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் குளறுபடிகள் ஏற்பட்டது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கூறுகிறார். எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமகால அரசியல் விடயங்களை அலசி ஆராயும் போது இந்த விடயத்தைக் கூறிய அவர், ஜெனிவாவில் வரப்போகின்ற தீர்மானம் குறித்த கவனம் தமிழர் தரப்பிடம் சிதறிப் போயிருக்கிறது. நாங்கள் ஒரு தேசமாக இல்லை. நீதி கோரும் மக்களாகவும் நாம் சிதறிப் போயிருக்கிறோம் எனக் கூறினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட பிளவு தான் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது. இதுதான் அடிப்படை உண்மையும் கூட. இந்த விடயத்தில் கூட்டமைப்பு விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது. கூட்டமைப்பு இந்த குழப்பத்திற்குள் வரவும் இல்லை. திலீபனின் எதிர்பார்ப்பு விடுதலைப் புலிகள் அமைப்பின் மெய்யான வாரிசுகள் யார்..! திலீபன் போன்று தியாகத்துக்கு தயாரா..! | Thileepan Memorial 2022 Last Day Incident Review திலீபன் ஒரு வசனம் கூறியிருந்தார் “நான் வானத்திலிருந்து கொண்டு என் மக்கள் விடுதலை அடைவதை பார்ப்பேன் என்று” ஆனால் இந்த முறை அவர் வானத்தில் இருந்து கொண்டு தன் மக்கள் மோதிக்கொள்வதை தான் பார்த்திருப்பார். அப்படித்தான் சொல்லவேண்டி இருக்கிறது. உண்மையிலேயே கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு முன்னாள் இயக்கத்தவர்களை மோசமாக அவமதிக்கும் நிலைக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது.
முன்னாள் போராளிகள் என்று கூறும் பொழுது அவர்கள் இப்போது போராளிகள் அல்ல என்று அர்த்தம் வரும். இதனால், போராளி என்பது ஒரு தொழிலாக விடும். இல்லை, போராளி என்பவர் எப்பொழுதுமே போராளி தான். சிறுமை கண்டு பொங்கும் அனைவருமே போராளிகள் தான். திலீபனின் புனிதமான நாளில் குழப்பம் நிகழ்ந்தது எப்படி..! சாட்சியமாக மாறிய காக்கா அண்ணா முன்னாள் போராளிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மெய்யான வாரிசுகள் யார்..! திலீபன் போன்று தியாகத்துக்கு தயாரா..! | Thileepan Memorial 2022 Last Day Incident Review போராளிகள் கட்டாயம் ஆயுதம் ஏந்திய இயக்கத்தில் தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. அவர்கள் இயக்கங்களில் அல்லது கட்சிகளில் தான் இருக்க வேண்டும் என்றும் அல்ல. சமூக மட்டங்களிலும் போராளிகள் இருக்க முடியும். இந்த இடத்தில் தான் முன்னாள் போராளிகள் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நினைவு கூறும் இடத்தில் நினைவு கூர்தலின் அமைதியை, கட்சிகள் தங்களுக்கு இடையில் மோதி, அதில் முன்னாள் இயக்கத்தவர்களையும் தத்தமது பக்கம் இழுத்துக்கொண்டு மோத வைத்திருக்கிறது. இந்த மக்களுக்காக இனி யாருமே போராடத் துணிய மாட்டார்கள் என்கின்ற ஒரு நிலையைத் தான் இந்த நினைவேந்தல் குழப்பங்கள் ஏற்படுத்திவிட்டு இருக்கிறது. அண்மை நாட்களில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் முப்பத்தி ஐந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் இடம்பெற்ற குளறுபடிகள், அதன் பின்னால் இருந்த சக்திகள், அது வழிநடத்தப்பட்ட விதம், அதன் பின்னால் இருக்கும் அரசியல், இதனால் தமிழர் தரப்புக்கு ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பாக பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் தெரிவித்த விடயங்களை காணொளியில் காண்க,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?