முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 94 இந்தியாவில் பெண்களை இலக்கு வைக்கும் மந்திரவாளிகள்

பெண் உறப்பை சாப்பிட்டால் ஆயுள் கூட என கட்டுக் கதை,
நரபலி கொடுத்து உடலை சமைத்து சாப்பிட்ட கொடூரம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸாரின் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் ர்மபுரி, பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் காலடியைச் சேர்ந்த ரோஸ்லி ஆகிய 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நரபலி கொடுத்து உடலை சமைத்து சாப்பிட்ட கொடூரம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Kerala Couple Sacrifice Two Women For Prosperity முகமது ஷாபி ஒரு கொடும் சைக்கோ இந்த சம்பவம் தொடர்பில் மந்திரவாதி முகமது ஷாபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கொச்சி நகர பொலிஸ் ஆணையர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
ரோஸ்லிக்கு 10 லட்சம் ரூபா தருவதாகவும், பத்மாவுக்கு 15,000 ரூபா தருவதாகவும் ஆசை காட்டி பகவல் சிங்கின் வீட்டுக்கு ஷாபி அழைத்துச் சென்று இருக்கிறார். மூவரும் சேர்ந்து இந்த இரண்டு பெண்களை மிக கொடூரமாக கொலை செய்து ரத்தத்தால் பூஜை செய்துள்ளனர். உடலை துண்டுத் துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்டதாக லைலா கூறியுள்ளார். முகமது ஷாபி ஒரு கொடும் சைக்கோ ஆவார். பணத்திற்காக எதையும் செய்வார். இவர் மீது எட்டு குற்றவியல் வழக்குகள் உள்ளன. சமூக வலைதளங்களில் போலி கணக்கு இவர் பெண்களின் உடல்களில் கத்தியால் குத்தி, ரத்தம் பீய்ச்சியடிப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டுள்ளார். இவர் சமூக வலைதளங்களில் ஸ்ரீதேவி என்ற பெயரில் போலி கணக்கை தொடங்கி, பலருக்கும் வலை விரித்துள்ளார். நரபலி கொடுத்து உடலை சமைத்து சாப்பிட்ட கொடூரம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Kerala Couple Sacrifice Two Women For Prosperity பூஜை செய்தால் செல்வம் சேரும் என்று பேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார். சிலருக்கு ஸ்ரீதேவி என்ற பெயரில் இவர் காதல் வலையும் விரித்துள்ளார். அதில் தான் பகவல் சிங்கும் சிக்கினார். ஸ்ரீதேவியை கடைசி வரை காதலித்த பகவல் சிங்கிற்கு, பொலிஸார் கூறும் வரை ஸ்ரீதேவி தான் முகம்மது ஷாபி என்று தெரியாது” என்று அவர் கூறினார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?