முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 135 தென்நிலைங்கையில் தொடரும் குடும்ப வன்முறைகள்,

பெற்றோருக்கு இடையிலான சண்டையில் 10 வயது மகன் உயிரிழப்பு..!
கணவன் மனைவி தகறாறு ஒன்றில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தென்னிலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. மாத்தறை - வெளிமாருவ பிரதேசத்தில் நேற்று இரவு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு ஒரு சிறுவனின் மரணத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தகராறில் மனைவியை கணவன் கொலை செய்ய முற்பட்ட போது சிறுவன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது பெற்றோருக்கு இடையிலான சண்டையில் 10 வயது மகன் உயிரிழப்பு..! | Child Dead In Parents Fight In Matara தனது கணவன் தொடர்பில் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு வழங்குவதற்காக மனைவி தனது 12 மற்றும் 10 வயது பிள்ளைகளுடன் உந்துருளியில் சென்ற போது இளுக்கெட்டிய பாலத்திற்கு அருகில் மறைந்திருந்த கணவன் மணைவியை கத்தியால் வெட்ட முற்பட்டுள்ளார். எனினும் உந்துருளியில் முன்பக்கமாக இருந்த 10 வயது சிறுவனின் தலையில் கத்தி பாய்ந்த நிலையில், சிறுவன் மொறவகாக கொஸ்நில்கொட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து கராபிடிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் இன்று காலை 06.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். 3 தடவைகள் திருமணம் பெற்றோருக்கு இடையிலான சண்டையில் 10 வயது மகன் உயிரிழப்பு..! | Child Dead In Parents Fight In Matara குறித்த சம்பவத்திற்கு காரணமான கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் 3 தடவைகள் திருமணமாகியுள்ளதுடன், குறித்த பெண்ணின் 2 ஆவது கணவனின் பிள்ளையையே இவ்வாறு 3 ஆவது கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்ததாக கூறப்படும் நபர் பர்ப்பள் ரேன்ஞ் (purple range) இசைகுழுவின் பாடகரான 44 வயதுடைய பிரசன்ன விக்ரமகே என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் வெளிவ பௌத்த மகாவித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் ஏகொட கமகே சதேவ் நெத்சர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். சடலம் மரண பரிசோதணைக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?