முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 434 ஜனாதிபதி பதவி விலகுவது ஒரு போதும் நடக்காது - ரணில்

ஜனாதிபதி பதவி விலகுவது ஒரு போதும் நடக்காது - ரணில் வெளியிட்ட தகவல்
ஜனாதிபதி ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், அது ஒருபோதும் நடக்காது என பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். இந்நிலையில், ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்களுக்கு மூன்று வேலை உணவு கிடைப்பதை உறுதிசெய்வதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் சிதைந்துவிட்டது. இந்நிலையில், மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த விடயங்களை சரிசெய்து மீண்டும் நாட்டை வழமைக்கு கொண்டு வருவேன்" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பதவி விலகுவது ஒரு போதும் நடக்காது - ரணில் வெளியிட்ட தகவல் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். எனினும், அவரது நியமனம் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது, ஏனெனில் அவர் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராக செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். ஜனாதிபதி ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க எனினும், அது ஒருபோதும் நடக்காது என்றும் கூறியுள்ளார். ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகுவது ஒரு போதும் நடக்காது - ரணில் வெளியிட்ட தகவல் 1948 இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி இதுவாகும். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. உணவு, மருந்து மற்றும் எரிபொருள் கட்டுப்படியாகாததாகிவிட்டன. சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்து உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனை தொடர்ந்து கடந்த 9ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசிய நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்ப்புகளை தணிக்கும் முயற்சியாக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பிரதமராக நியமித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?