முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 422 தலைமை அமைச்சராகும் அதிசயம்!

தனித்து ஓர் எம்.பியாகத் தெரிவாகி தலைமை அமைச்சராகும் அதிசயம்!
தமது கட்சியின் சார்பில் தனித்து ஏக எம்.பியாக - அதுவும் தேசியப்பட்டியல் மூலம் - நாடாளுமன்றம் சென்ற ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேறு தரப்புகளோடு கூட்டணி அமைக்காமலேயே பிரதமராகும் அதிசயம் இன்று நடைபெறுகின்றது. தற்போதும் கொழும்பு அரசியலில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளைச் சாணக்கியமாகப் பயன்படுத்தி காய்களை நகர்த்திய அவர் அதன் மூலம் பிரதமர் பதவியை இன்று ஏற்கும் வாய்ப்பை சுவீகரித்துக் கொண்டார் எனத் தெரியவருகின்றது. தாம் இன்று பிரதமராகப் பதவியேற்கும் விவரங்களைப் பிற கட்சித் தலைவர்களுக்கு நேற்று அவரே உறுதிப்படுத்தினார் என அறியவந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று நேரடியாகச் சந்தித்துப் பேச்சு நடத்திய ரணில் விக்கிரமசிங்க அதனை அடுத்து ஏனைய கட்சிகளின் தலைவர்களுடனும் பிரமுகர்களுடனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார். தாம் இன்று பிரதமராகப் பதவியேற்கின்றார் என்ற செய்தியை அப்போது அவர்களுக்கு ரணில் தெரியப்படுத்தினார். பல தலைவர்களையும் தொடர்பு கொண்டு அவர் ஆதரவு கோரினார் எனவும் தெரிகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியினர், அதிலிருந்து வெளியேறி இப்போது சுயாதீனமாகச் செயற்படும் குழுவினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எனப் பழைய மொட்டுக் கட்சி அரசின் உறுப்பினர்கள் அனைவரும் ரணிலின் அரசில் இணைய இணக்கம் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இதனால் அவரது அரசும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்புத் தாராளமாக இருப்பதாகத் தெரிகின்றது. இதேநேரம் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்தும் பல எம்.பிக்கள் குத்துக்கரணம் அடித்து ரணிலின் அரசில் இணைவார்கள் என்று சில வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இன்று ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே பிரதமராகப் பதவியேற்பார். பின்னர் ஜனாதிபதியோடு அவர் கலந்தாலோசனை செய்து அமைச்சர்கள் பட்டியலைத் தயாரிப்பார். அதன் பின்னர் அமைச்சர்கள் பதவியேற்பு எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?